YouTurn

தஞ்சை பெரிய கோவிலின் தரைத்தளத்தை தமிழ்நாடு அரசு சேதப்படுத்துவதாகப் பரவும் தவறான தகவல் !

தஞ்சை பெரிய கோவிலின் தரைத்தளத்தை தமிழ்நாடு அரசு சேதப்படுத்துவதாகப் பரவும் தவறான தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

தஞ்சை கோவிலின் தரைதளத்தை தமிழ்நாடு அரசு..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு, 1010 ஆண்டுகளையும் கடந்து விட்டது. இந்நிலையில் அக்கோவிலின் தரைத்தளம் தமிழ்நாடு அரசால் சேதப்படுத்தப்படுவதாகக் கூறி 2:20 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்றை பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் அந்த வீடியோவில், கோவிலின் தரைத்தளத்தை சிலர் உளியைப் பயன்படுத்தி உடைப்பது போன்றும், கோவிலைச் சுற்றி புதிய செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.





உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தஞ்சை பெரிய கோவிலில் பாராமரிப்பு பணிகள் குறித்து Behindwoods air தனது யூடியூப் பக்கத்தில் ஜனவரி 28 அன்று "'தஞ்சை கோயிலில் நொறுக்கப்படும் தரை'.. Archeology department போட்ட மாஸ்டர் பிளான்..! நடப்பது என்ன?" என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.



அந்த வீடியோவின் 29 வது வினாடியில்  "இந்திய அரசு, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, திருச்சி வட்டம், இங்கு பாராமரிப்பு பணி நடைபெறுகிறது" என்று குறிப்பிடப்பட்ட பேனர் ஒன்று தஞ்சை கோவிலில் கட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் தஞ்சைப் பெரிய கோவிலின் தரைத் தளத்தில் உள்ள பழைய செங்கற்களை அகற்றிவிட்டு, புதிய செங்கற்கள் பதிக்கும் பணியை, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை செய்துவருகிறது என்பது உறுதியாகிறது.



இதே போன்று கடந்த 2018-லும் இந்திய தொல்லியல் துறை தஞ்சை பெரிய கோவிலில் பராமரிப்பு பணிகளை செய்துள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வதற்காக அப்போதே Youturn குழு தஞ்சைக் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பாக அந்த சீரமைப்பு பணிக்கான மேற்பார்வையாளர் ராஜன் என்பவரிடம் யூடர்ன் தரப்பிலிருந்து பேசியபோது, சிற்பங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, நடைபாதை மட்டுமே சரிசெய்யப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட நடைப்பாதையில் மேடும் பள்ளமும் இருந்து கோவிலுக்கு வரும் மக்களுக்கு நடக்கையில் சிரமம் ஏற்படுகிறது. நடைப்பாதை சரிசெய்யப்பட்டு சீராக்கப்படும் என்றார். இது தொடர்பாக தொல்லியல் துறையை சேர்ந்தவர்களிடமும் அப்போதே பேசி இதன் உண்மைத்தன்மை குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க: தஞ்சைப் பெரிய கோவிலின் பராமரிப்பு பணி தொடர்பான சர்ச்சை..!

இதன் மூலம் பெரிய கோவிலில் நடைபெறும் பாராமரிப்பு பணியை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளவில்லை என்பதையும், கோவிலில் சீரமைப்பு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.

முடிவு :

நம் தேடலில், தஞ்சை பெரிய கோவிலின் தரைத்தளத்தை தமிழ்நாடு அரசு சேதப்படுத்துவதாகப் பரப்பப்படும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க