
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியாவில் உள்ள கோவில்களில் வெடிகுண்டுகள் வைத்து நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் பர்தா அணிந்து பெண் வேடத்தில் சுற்றிவந்த தீவிரவாதியை பெங்களூரில் காவல்துறையினர் கைது செய்ததாகக் கூறி சில படங்கள் சமூக வலைதளத்தில் காணப்படுகிறது. கோவில்களில் குண்டு வைக்க பெண் வேடத்தில் வந்த தீவிரவாதி...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்தியாவில் உள்ள கோவில்களில் வெடிகுண்டுகள் வைத்து நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் பர்தா அணிந்து பெண் வேடத்தில் சுற்றிவந்த தீவிரவாதியை பெங்களூரில் காவல்துறையினர் கைது செய்ததாகக் கூறி சில படங்கள் சமூக வலைதளத்தில் காணப்படுகிறது.
கோவில்களில் குண்டு வைக்க பெண் வேடத்தில் வந்த தீவிரவாதி எனக் கூறும் படமானது எகிப்து நாட்டில் குழந்தைக் கடத்துபவரை கைது செய்த படமாகும். கடந்த ஆகஸ்ட் மாதம், எகிப்து நாட்டில் பர்தா அணிந்து வந்த பெண்ணின் மீது சந்தேகப்பட்ட பொதுமக்கள் அவரைப் பிடித்து சோதனை செய்தனர். அவ்வாறு பொதுமக்களிடம் அகப்பட்டவர் உண்மையில் பெண் இல்லை. பெண் போல வேடமணிந்து குழந்தைகளை கடத்துபவன் என்று தெரியவந்ததும் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
காவல்துறையின் விசாரணையின் போது அவன் எவ்வாறெல்லாம் உடையணிந்து உள்ளான் என்று விளக்கும் நோக்கத்தில் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை எடுத்து இந்திய கோவில்களில் வெடிகுண்டு வைக்க வந்த தீவிரவாதி என்று வதந்தியைப் பரப்பியுள்ளனர்.
பர்தா அணிந்து இருந்ததால் தீவிரவாதி என்றுக் கூறினால் அனைவரும் உண்மையென்று நம்பி அதிகம் பகிர்வார்கள் என்பதற்காகவோ அல்லது சில அமைப்புகள் வன்முறைகளை தூண்டுவதற்காகவோ இவ்வாறு செய்திருக்கலாம்.