
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சமஸ்கிருதம் தவிர்த்து தமிழில் குடமுழுக்கு, அர்ச்சனைகள் செய்யப்பபட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழக்கூடியவை. சமீபத்தில் கூட, தஞ்சைப் பெரியக் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் பாடல்கள் ஒலிக்க நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நீதிமன்றம் வரை சென்றது. இதன் பயனாய்...
பரவிய செய்தி
சமஸ்கிருதம் தவிர்த்த மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் மூலம் தடை செய்வோம் - உள்துறை அமைச்சர் அமித்ஷா.
Facebook link | archived link
Facebook link | archived link
விரிவான விளக்கம்
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சமஸ்கிருதம் தவிர்த்து தமிழில் குடமுழுக்கு, அர்ச்சனைகள் செய்யப்பபட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழக்கூடியவை. சமீபத்தில் கூட, தஞ்சைப் பெரியக் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் பாடல்கள் ஒலிக்க நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் நீதிமன்றம் வரை சென்றது.
இதன் பயனாய் தஞ்சைப் பெரியக் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்த நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், சமஸ்கிருதம் தவிர்த்த மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் மூலம் தடை செய்வோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று முகநூலில் பரப்பப்பட்டு வருகிறது.
மொழி சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் அறிந்ததே. உண்மையில், அமித்ஷா பிற மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் மூலம் தடை செய்வோம் எனக் கூறியிருந்தால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்து இருக்கும்.
Facebook link | archived link
ஆகையால், தந்தி டிவியின் முகநூல் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆராய்ந்து பார்க்கையில் பிப்ரவரி 4-ம் தேதி வெளியான செய்தியில், தேசிய அளவில் குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் திட்டம் தற்போது இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதாக நியூஸ் கார்டு ஒன்று கிடைத்தது. அதையே மாற்றி தவறான செய்தியை பரப்பி உள்ளனர்.

இதன் பயனாய் தஞ்சைப் பெரியக் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்த நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், சமஸ்கிருதம் தவிர்த்த மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் மூலம் தடை செய்வோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று முகநூலில் பரப்பப்பட்டு வருகிறது.
மொழி சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் அறிந்ததே. உண்மையில், அமித்ஷா பிற மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் மூலம் தடை செய்வோம் எனக் கூறியிருந்தால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்து இருக்கும்.
Facebook link | archived link
ஆகையால், தந்தி டிவியின் முகநூல் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆராய்ந்து பார்க்கையில் பிப்ரவரி 4-ம் தேதி வெளியான செய்தியில், தேசிய அளவில் குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் திட்டம் தற்போது இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதாக நியூஸ் கார்டு ஒன்று கிடைத்தது. அதையே மாற்றி தவறான செய்தியை பரப்பி உள்ளனர்.
