
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
X Link | Archive Linkவிரிவான விளக்கம்
மேலும் பரவி வரும் அப்பதிவுகளில், கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இருந்தும், அரசு பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் கோவிலை மட்டும் இடித்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#ExitPolls #election
Tamilnadu DMK Government has Destroyed Hindu Temple (Lord Ganesha) Despite many people's protest, They say the temple was built on Occupied Land, Note there are many buildings around the temple but only the Temple was targeted. They destroyed it after the… pic.twitter.com/TK9f8UO78D
— theboysthing_ (@Theboysthing) June 2, 2024
#Tamilnadu DMK Government has Destroyed #Hindu Temple, Despite many people's protest, They say the temple was built on Occupied Land.#Note: There are many buildings around the temple but only the Temple was targeted. They destroyed it after the elections completed @arivalayam pic.twitter.com/M81kxmne4M
— Socialgandhi (@iamsocialgandhi) June 2, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து தேடியதில், கள்ளக்குறிச்சியில் உள்ள காந்தி சாலையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் மற்றும் தர்ம சாஸ்தா கோவில்களை இடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து நக்கீரன் ஊடகம், ஜூன் 02 அன்று "நீதிமன்ற உத்தரவு; கோவில், கடைகளை இடித்து தரமட்டமாக்கிய அதிகாரிகள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி நகர் காந்தி சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியின் பாசன கால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டதால், கடந்த 2020ம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கக்கோரி சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்து, 8 வாரத்திற்குள் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நீங்களே ஆக்ரமிப்பை அகற்றிக்கொள்ளுங்கள், நாங்கள் அகற்றினால் அதற்கான செலவுத் தொகையை உங்களிடம் வசூலிப்போம் என நீர்வளத்துறை சார்பில் கடந்த மே 16ம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில் அகற்றாத கட்டங்கள் கடந்த 28ம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதே போன்று தினமலர் வெளியிட்டுள்ள செய்தியிலும், காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட 36 கட்டடங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.
தாமாக இடித்துக்கொள்ளும்படி உத்தரவிட்டும் பல கடைகள் இடிக்கப்படாமல் இருந்தன. எனவே கடந்த மே 28ம் தேதி பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு டீக்கடை, இரண்டு மருந்து கடைகளை இடித்து அகற்றினர். இந்நிலையில், காந்தி ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் மற்றும் தர்மசாஸ்தா கோவில்கள் அகற்றப்படுவதாக நேற்று முன்தினம் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு, அதன்படி கோவில்கள் இடிக்கப்பட்டன என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் கள்ளகுறிச்சியில் தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரண்டு கோவில்கள் மற்றும் 36 கட்டடங்களை இடிக்கவேண்டும் என்று 2020 இல் போடப்பட்டிருந்த வழக்கிற்கு, தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதையும், அதன்படி கோவில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தேர்தலுக்கு பின் கோவிலை இடித்த தமிழ்நாடு அரசு, கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை மட்டும் இடிக்கவில்லை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.