YouTurn

டான்சானியாவில் உள்ள ஏரியில் பறவைகள் கற்களாக மாறுகின்றனவா ?

டான்சானியாவில் உள்ள ஏரியில் பறவைகள் கற்களாக மாறுகின்றனவா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருக்கும் நட்ரோன் ஏரியில் பறவைகளின் உடல் கற்கள் போன்று காட்சியளிக்கின்றன. எனினும், இது எவ்வாறு நிகழ்ந்து என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், ரிக் ப்ராண்ட் என்ற புகைப்பட கலைஞர் நட்ரோன் ஏரியில் பறவைகள் கல் போல் இருக்கும் காட்சிகளை படமாக்கி உள்ளார்...

பரவிய செய்தி

டான்சானியாவில் இருக்கும் ஏரியில் பறவைகள் கற்களாக மாறி வருகிறது.

விரிவான விளக்கம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருக்கும் நட்ரோன் ஏரியில் பறவைகளின் உடல் கற்கள் போன்று காட்சியளிக்கின்றன. எனினும், இது எவ்வாறு நிகழ்ந்து என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், ரிக் ப்ராண்ட் என்ற புகைப்பட கலைஞர் நட்ரோன் ஏரியில் பறவைகள் கல் போல் இருக்கும் காட்சிகளை படமாக்கி உள்ளார். அந்த படங்கள் உலக அளவில் பிரபலமடைந்தது.



நட்ரோன் ஏரியில் அல்கலினிட்டி(காரத் தன்மை) மிக அதிகமாக இருக்கிறது. அந்த ஏரியின் ph மதிப்பு 10.5 அளவிற்கு உயர்ந்து, ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக மாறியுள்ளது. இதனால், தோல், கண்கள் உள்ளிட்டவை எரியக்கூடும். விலங்குகள் அதனை ஏற்றுக் கொண்டு வாழ்வது கடினம் என்கிறார்கள்.

ஏரிக்கு அருகில் இருக்கும் மலைகளில் எரிமலைகள் இருப்பதனால் சோடியம் கார்போனேட் மற்றும் பிற மினரல்கள் ஏரி நீரில் கலந்ததால் நீரின் தன்மை மாறியது. இதன் விளைவாக பறவைகள் இறந்து, அதன் உடல்கள் கல் போல் காட்சி அளித்து இருக்கலாம்.



நட்ரோன் ஏரியில் பறவைகள் மற்றும் வௌவால்கள் உடல்களை புகைப்படங்கள் எடுத்த ரிக் ப்ராண்ட் கூறுகையில், " பறவைகள் எவ்வாறு இறந்தன என்பது குறித்த சரியான காரணம் தெரியவில்லை. ஆனால், அந்த நீர் அதிக அளவில் சோடா மற்றும் காரத்தன்மை உடன் இருக்கிறது " என்றுள்ளார்.

இது குறித்த செய்திகள் 2013-ம் ஆண்டிலேயே வெளியாகி இருக்கின்றன. இறந்த பறவைகள் உயிருடன் இருப்பது போன்று காட்சியளிப்பதை தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளார். நட்ரோன் ஏரி கடலிலோ அல்லது ஆற்றிலோ கலக்க கூடியதல்ல.

பறவைகள் இருக்கும் நிலையை பார்க்கும் பொழுது கடினமான காரத்தன்மை கொண்ட நீர் வறட்சி காலத்தில் ஆவியாகும் பொழுது வேதிப்பொருட்களின் விளைவால் இவ்வாறு நிகழ்ந்து இருக்கலாம்.

சுருக்கமாக

காரத்தன்மை அதிகம் கொண்ட நட்ரோன் ஏரியில் பறவைகளுக்கு இவ்வாறு நிகழ்ந்து உள்ளது. இறந்த பறவைகள் கற்கள் போன்று காட்சியளிக்கின்றன. அப்பகுதியை பற்றி விரிவாக படிக்கவும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.