YouTurn

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வருகிறதா ? வாட்ஸ் அப் வதந்தியை நம்பாதீர்கள் !

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வருகிறதா ? வாட்ஸ் அப் வதந்தியை நம்பாதீர்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

டிசம்பர் 8 ஆம் தேதி புயல் வரலாம் "Tauktao" என்று பெயர் . டிசம்பர் 17 ஆம் தேதி புயல் வரலாம் "Yaas" என்று பெயர்.. டிசம்பர் 24 ஆம் தேதி புயல் வரலாம் "Gulab"என்று பெயர்.. ஜனவரி 01 ஆம் தேதி ஒரு புயல் வரலாம் "Shaheen"என்று பெயர்.. ஜனவரி 8 ஆம் தேதி ஒரு புயல் வரலாம் "Jawad "என்று பெயர்.. வானிலை நிலையம் அறிவிப்பு.. தமிழ்நாடு ஒரு புயல் மாநிலமாக உருவாகிறதா... ஐந்து புயல்கள் வரிசையாக வருகிறது.



Facebook archive link 

விரிவான விளக்கம்

நிவர் மற்றும் புரெவி ஆகிய இரு புயல்கள் அடுத்தடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழையை பொழிந்ததோடு பாதிப்புகளையும் ஏற்படுத்தி சென்றன. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க உள்ளதாக தேதியுடன் ஒவ்வொரு புயலுக்கு பெயரும் வைத்து ஓர் ஃபார்வர்டு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.



தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க உள்ளதாக பரவும் ஃபார்வர்டு தகவல் முற்றிலும் வதந்தியே. அவ்வாறான எந்தவொரு தகவலையும் தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத்தின் தரப்பில் வெளியிடவில்லை. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மட்டுமே இப்படியொரு வதந்தி பரவி வருகிறது.

தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில், " இதுபோன்ற செய்திகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். இது முற்றிலும் வதந்தியே " எனப் பதிவிட்டு உள்ளார்.



Archive link 

தமிழகத்தில் அடுத்தடுத்து 2 புயல்கள்  தாக்கியதால் அதை வைத்து தொடர்ச்சியாக 5 புயல்கள் தாக்க உள்ளதாக ஃவாட்ஸ் அப் வதந்தியை பரப்பி இருக்கிறார்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க