YouTurn

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்ற பட்டாசு டிரக் தீ பிடித்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்ற பட்டாசு டிரக் தீ பிடித்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அயோத்திக்கு சென்ற பட்டாசு டிரக் தீப்பிடித்தது! தமிழ்நாட்டிலிருந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பட்டாசு ஏற்றிச் சென்ற டிரக் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு; தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், தீவிபத்தால் யாருக்கும் காயம் இல்லை என தகவல்

X link

விரிவான விளக்கம்

மிழ்நாட்டில் இருந்து அயோத்திக்கு ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குப் பட்டாசு ஏற்றிச் சென்ற டிரக் தீப்பிடித்து எரிந்ததாக ‘நியூஸ் தமிழ் 24X7’, 'பாலிமர்' நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதே செய்தியை வேறு சில ஊடகங்களும் வெளியிட்டுள்ளது.





மேலும் இந்த பட்டாசு டிரக் தீ பிடித்தது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அவரது X (எக்ஸ்) பக்கத்தில் ‘இந்தியா டுடே’ செய்தியைப் பதிவிட்டு “அயோத்தியில் பட்டாசு லாரி தீப்பிடித்து எரிந்தது. தெய்வீகத் தூய்மை ஒரு நகைச்சுவை அல்ல. தர்மத்தையும் சங்கராச்சாரியாரையும் மதிக்கவும். பாஜக இந்து தர்மத்தைப் போலியாகப் பயன்படுத்தி சங்கராச்சாரியாரைத் தாக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.



உண்மை என்ன?

காயத்ரி ரகுராம் பதிவிட்ட இந்தியா டுடே செய்தியில், ‘ஜனவரி 16ம் தேதி இரவு, தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்குப் பட்டாசு ஏற்றிச் சென்ற டிரக் தீப்பிடித்து எரிந்தது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் அச்செய்தியில் ‘இந்த டிரக் ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வான வேடிக்கைகளை ஏற்றி வந்தது என நம்பப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் முரண்பட்ட தகவல்கள் இருப்பதையடுத்து, இச்சம்பவம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதேனும் வெளியாகியுள்ளதா எனத் தேடினோம். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் (Unnao) பகுதி காவல் துறையினர் அவர்களது X பக்கத்தில் இது தொடர்பாக  பதிவிட்டிருந்த ஒரு தகவல் கிடைத்தது.



அதில், 2024, ஜனவரி 17ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பூர்வா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கர்கிகேடா கிராமத்தின் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற TN 28 AL 6639 என்ற டிரக் தீப்பிடித்தது. அதற்கான காரணம் தெரியவில்லை. தகவலின் பேரில் தீயணைப்புப் படையினர் தீயை முற்றிலுமாக அணைத்ததால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. சாலையில் இருந்த டிரக் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக இயங்குகிறது. டிரக் உரிமையாளரிடம் காவல் துறையினர் பேசியதில், தமிழ்நாட்டிலிருந்து பஹ்ரைச் (Bahraich) என்னும் பகுதியில் உள்ள கடைகளுக்குப் பட்டாசு, குழந்தைகள் போஸ்டர், திரைப்பட கலைஞர்களின் போஸ்டர், மத போஸ்டர் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது)

உன்னாவ் காவல் துறை அறிக்கையின்படி பட்டாசு ஏற்றிச் சென்று தீ பிடித்து எறிந்த டிரக் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றது கிடையாது என்பது தெரியவருகிறது. 

முடிவு: 

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்குத் தமிழ்நாட்டிலிருந்து பட்டாசு ஏற்றிச் சென்ற டிரக் தீ பிடித்து எரிந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. அந்த டிரக் தமிழ்நாட்டில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் (Bahraich) என்னும் பகுதியில் உள்ள கடைகளுக்குப் பட்டாசு மற்றும் இதர பொருட்களை ஏற்றிச் சென்றது காவல் துறையின் அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க