YouTurn

'கிறிஸ்தவர்களை தாக்கிய கம்யூனிஸ்ட்' என தவறான செய்தி வெளியிட்ட தமிழ் ஜனம்!

'கிறிஸ்தவர்களை தாக்கிய கம்யூனிஸ்ட்' என தவறான செய்தி வெளியிட்ட தமிழ் ஜனம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சாரும்மூடு-நூராநாடு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு கிறிஸ்துமஸ் கரோல் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

கிறிஸ்துவர்களை தாக்கிய கம்யூனிஸ்ட்



X Link | Archive Link

விரிவான விளக்கம்

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேரணி சென்ற கிறிஸ்துவர்கள் மீது இடதுசாரி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறி நியூஸ் கார்டு ஒன்றை 'தமிழ் ஜனம்' ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது. 


#Attack | #Christmas | #Kerala | #Alappuzha | #Communistsattack | #Tamiljanam pic.twitter.com/m9hYJtPhW5

— Tamil Janam (@TamilJanamNews) December 26, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் நியூஸ்கார்டில் உள்ள புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “India Today“ ஊடகப் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. 


டிசம்பர் 25, 2025 அன்று “India Today“ வெளியிட்டுள்ள செய்தியில், “கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சாரும்மூடு-நூராநாடு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு கிறிஸ்துமஸ் கரோல் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்போது இரண்டு கரோல் குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது உடல் ரீதியான சண்டையாக மாறியது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதே போன்று, “NDTV“ ஊடகத்திலும் பரவி வரும் புகைப்படம் குறித்து வீடியோவுடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “கேரளாவின் நூராநாடு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இளைஞர் சங்கத்திற்குள் நீண்ட காலமாக இருந்த தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவத்தனர்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



முடிவு: 


நம் தேடலில், கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பேரணி சென்ற கிறிஸ்துவர்கள் மீது இடதுசாரி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக ‘தமிழ் ஜனம்’ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி தவறானது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சாரும்மூடு-நூராநாடு பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு கிறிஸ்துமஸ் கரோல் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதை உறுதிபடுத்த முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க