YouTurn

அம்மாவை நினைத்து அழும் குழந்தை..!! சிரியாவை சேர்ந்தவரா ?

அம்மாவை நினைத்து அழும் குழந்தை..!! சிரியாவை சேர்ந்தவரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் சிரியாவின் உள்நாட்டு போரில் தாயை இழந்த குழந்தையிடம் இறந்த அம்மாவை நினைத்து கவலை உண்டா ? என டிவி நிரூபர் கேட்டதற்கு அந்த சிறுவன் அழுகும் காட்சிகள் என்ற தலைப்பில் 24 நொடிகள் கொண்ட வீடியோ பதிவு பதிவிடப்பட்டுள்ளது. தமிழ் பக்கத்தில் மட்டும் இந்த வீடியோ ஆயிரம் லைக்குகள், 5...

பரவிய செய்தி

சிரியா தீவிரவாதிகளால் அம்மாவை இழந்த சிறுவனிடம், அம்மாவை இழந்ததால் கவலை உண்டா ? என டிவி நிரூபர் கேட்டதற்கு உலகையே அழ வைக்கும் அந்த சிறுவனின் 24 விநாடி கண்ணீர் பதில்..!!

விரிவான விளக்கம்

ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் சிரியாவின் உள்நாட்டு போரில் தாயை இழந்த குழந்தையிடம் இறந்த அம்மாவை நினைத்து கவலை உண்டா ? என டிவி நிரூபர் கேட்டதற்கு அந்த சிறுவன் அழுகும் காட்சிகள் என்ற தலைப்பில் 24 நொடிகள் கொண்ட வீடியோ பதிவு பதிவிடப்பட்டுள்ளது. தமிழ் பக்கத்தில் மட்டும் இந்த வீடியோ ஆயிரம் லைக்குகள், 5 ஆயிரம் ஷேர்களை பெற்றுள்ளது.



அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் Entertainment Tonight என்ற செய்தி நிறுவனத்தின் சார்பில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 2015-ம் ஆண்டில் Entertainment Tonight நிரூபர் மீண்டும் பள்ளிக்கு செல்லும் கதையை பற்றி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரு சிறுவனின் அழும் காட்சிகள் அனைவரையும் திகைப்புக்குள்ளாக்கியது.



Pre.KG செல்லும் 4 வயது சிறுவனிடம் நிரூபர் முதல் நாள் பள்ளி செல்வது பற்றி கேட்கும் பொழுது, உன் அம்மாவை மிஸ் பண்ணுறியா என்று கேட்டதற்கு " இல்லை " என்று கூறிய சில நொடியில் அழத் தொடங்கியுள்ளான். இந்த வீடியோ Entertainment Tonight-ன் youtube தளத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது "



சிறுவன் அழுத காட்சியை மட்டுமே தவறாக நினைத்து சிரியா நாட்டின் போருடன் தொடர்புப்படுத்தி தவறான தகவலை பகிர்ந்து உள்ளனர்.

சுருக்கமாக

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் Entertainment Tonight என்ற செய்தி நிறுவனத்தின் சார்பில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 2015-ம் ஆண்டில் Entertainment Tonight நிரூபர் மீண்டும் பள்ளிக்கு செல்லும் கதையை பற்றி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரு சிறுவனின் அழும் காட்சிகள் அனைவரையும் திகைப்புக்குள்ளாக்கியது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.