யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக நியூஸ் தமிழ் 24 ×7 செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் 1:26 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை அதிமுகவை சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர்.பரவக்கூடிய வீடியோ குறித்து தேடியதில் இது தற்போது நடந்தது அல்ல என்பதை அறியமுடிந்தது.மேலும், நியூஸ் தமிழ் 24 ×7 செய்தி குறித்து அவர்களது அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தேடினோம். அப்படி எந்தவொரு செய்தியும் தற்போது வெளியாகவில்லை என்பதையும் அறியமுடிந்தது.
பரவிய செய்தி
தமிழக அரசுக்கு 5 லட்சம் அபராதம் உச்சநீதிமன்றம் நெம்பர் ஒன் முதல்வருக்கு வந்த சோதனை. 
X Link
விரிவான விளக்கம்
தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக நியூஸ் தமிழ் 24 ×7
செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் 1:26 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை அதிமுகவை சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர்.
தமிழக அரசுக்கு 5 லட்சம் அபராதம் உச்சநீதிமன்றம் நெம்பர் ஒன் முதல்வருக்கு வந்த சோதனை pic.twitter.com/cfD98goLH6
— ADV.SURULIRAJAN - Say No To Drugs & Dmk (@AdvSurulirajan) July 7, 2024
உண்மை என்ன ?
பரவக்கூடிய வீடியோ குறித்து தேடியதில் இது தற்போது நடந்தது அல்ல என்பதை அறியமுடிந்தது.
மேலும், நியூஸ் தமிழ் 24 ×7 செய்தி குறித்து அவர்களது அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தேடினோம். அப்படி எந்தவொரு செய்தியும் தற்போது வெளியாகவில்லை என்பதையும் அறியமுடிந்தது.
இதனைத்தொடர்ந்து , பரவக்கூடிய வீடியோவில் உள்ள தலைப்பைக் கொண்டு தேடியதில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அன்று நியூஸ் தமிழ் 24 ×7 அவர்களது முகநூல் பக்கத்தில் பரவக்கூடிய முழு வீடியோ பதிவிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
மேலும் தேடியதில், “நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் – உச்சநீதிமன்றம்!” என்ற தலைப்பில் புதிய தலைமுறை அவர்களது இணையதளப் பக்கத்தில் கடந்த 28 செப்டம்பர் 2022 அன்று கட்டுரை ஒன்று வெளியிட்டு இருப்பதையும் காணமுடிந்தது .
இதே போன்று, தமிழக அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்… காரணம் இதுதான்! என்ற தலைப்பில் கடந்த ஆண்டு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி விகடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இதன்மூலம் பரவக்கூடிய நியூஸ் தமிழ் செய்தி தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பது உறுதியாகிறது.
முடிவு :
நம் தேடலில், பரவக்கூடிய செய்தி தற்போது நடந்தது அல்ல என்பதையும் 2022ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு என்பதையும் அறியமுடிகிறது.