YouTurn

சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைய உள்ளதாக வதந்தி !

சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைய உள்ளதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உச்ச நீதிமன்றத்தின் கிளை, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ... எல்லா புகழும் மோடி ஒருவருக்கே.



Facebook link

விரிவான விளக்கம்

டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 3 முக்கிய நகரங்களில் அமைக்க உள்ளதாகவும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பதிவுகள் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் சுற்றி வருகிறது.



உண்மை என்ன ?

சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.



Twitter link  

பத்திரிகை தகவல் பணியகம்(PIB) உடைய ட்விட்டர் பக்கத்தில், " இத்தகைய கூற்று போலியானது. அத்தகைய முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை " எனப் பதிவிடப்பட்டுள்ளது.

2019-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், " இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உச்சநீதிமன்றத்தை நான்கு பிராந்திய கிளைகளாக நிறுவ வேண்டும் என்கிற யோசனையை பரிந்துரைத்து இருந்தார். இந்த யோசனை புதியவையும் அல்ல, சட்ட ஆணையம் தவிர, இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் அறிக்கையிலும் அவர்கள் முன்மொழிந்தனர். ஆனால், அந்த யோசனை தீவிரமான விவாதமானவும் உருவாகவில்லை. உச்ச நீதிமன்றமே இந்த யோசனைகளை எதிர்க்கிறது " என வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் அமைக்கப்பட போவதாக பரவும் தகவல் வதந்தியே. இந்திய அரசின் தரப்பில் அப்படி எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மாறாக, மறுத்த தகவலே வெளியாகி இருக்கிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க