YouTurn

இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி காய்கறி விற்றாரா ?| உண்மை என்ன ?

இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி காய்கறி விற்றாரா ?| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வருஷத்துக்கு ஒருநாள். இன்போசிஸ் ஓனர் திரு. நாராயண மூர்த்தி சாரோட மனைவி, திருமதி. சுதா நாராயண மூர்த்தி, தன்னோட ஈகோவை உடைக்கறதுக்காக. தன்னை யாருன்னு காட்டிக்காம, தெருவுல உக்காந்து காய்கறி விப்பாங்களாம். வாழ்க்கைப் பாடத்தை கத்துக்க. இவங்களைவிட மேலான ஒரு ஆசிரியர், நமக்கு கிடைப்பாங்களா ?



Facebook link | archive link

விரிவான விளக்கம்

இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி ஈகோவை உடைப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தன்னை யாரென்று அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தெருவில் காய்கறி விற்பனை செய்கிறார் எனக் கூறி காய்கறிகள் சூழ்ந்து இருக்க சுதா மூர்த்தி அமர்ந்து இருக்கும் புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.



Twitter link | archive link 



ஐஆர்எஸ் அலுவலரான சுரபி என்பவர் ட்விட்டரில் சுதா மூர்த்தியின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். பல மொழிகளில் ட்விட்டர், முகநூல் உள்பட சமூக வலைதளங்களில் சுதா மூர்த்தி காய்கறி விற்பனை செய்வதாக கூறும் தகவல் சுற்றித் திரிகிறது. சில பதிவுகளில், சுதா மூர்த்தி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு வெளியே ஆண்டிற்கு ஒருமுறை காய்கறிகளை விற்பனை செய்வதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

உண்மை என்ன ? 

எழுத்தாளரான சுதா மூர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் கோவிலுக்கு வெளியே காய்கறி விற்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது. அவர் காய்கறி விற்பனை செய்யவில்லை, கோவிலுக்கு தன்னார்வ அடிப்படையில் தொண்டு சேவை செய்து வருகிறார். காய்கறிகள் சூழ்ந்து இருப்பதால் காய்கறியை விற்பனை செய்வதாக ஓர் கதையை உருவாக்கி பரப்பி வருகிறார்கள்.



2013-ம் ஆண் அக்டோபர் 27-ம் தேதி பெங்களுர் மிரர் செய்திக்கு சுதா மூர்த்தி அளித்த பேட்டி குறித்த செய்தியில், " பெங்களுரின் ஜெயாநகரில் உள்ள ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் வருகை தந்து அங்குள்ள சமையல் அறை உள்ளிட்ட பகுதியை சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது, அலமாரியை சுத்தம் செய்தல், காய்கறிகளை நறுக்குவது, முற்றத்தை துடைப்பது போன்ற தொண்டு பணியில் ஈடுபடுவதாக " கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரில் உள்ள கோவிலுக்கு சென்று தனது உதவியாளர்கள் உடன் தொண்டு பணியை செய்து வருகிறார். பணம் அளிப்பது எளிதான காரியம், ஆனால் உடல் உழைப்பால் சேவைகளை மேற்கொள்வது அப்படியில்லை என சுதா மூர்த்தி கூறி இருக்கிறார். சுதா மூர்த்தி ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் தொண்டு சேவை செய்து வருவதால் பக்தர்கள் யாரேனும் இப்புகைப்படத்தை எடுத்து இருக்கலாம். ஆகையால், இப்புகைப்படத்தை யார், எப்போது எடுத்தார்கள் எனத் தெரியவில்லை.









சுதா மூர்த்தி காய்கறி விற்பனை செய்வதாக தவறான தகவலை பகிர்ந்த ஐஆர்எஸ் அலுவலர் சுரபி மீண்டும் தன் ட்விட்டர் பக்கத்தில் பெங்களூர் மிரர் செய்தியை குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார்.


முடிவு : 


நம் தேடலில், இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி ஒவ்வொரு ஆண்டும் காய்கறி விற்பனை செய்வதாக பரப்பப்படும் செய்தி தவறானது, ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் கோவிலில் தொண்டு பணிகளை செய்து வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படமே தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க