YouTurn

சூடான் மாடல் கருமையானத் தோலுக்கான கின்னஸில் இடம் பிடித்தாரா ?

சூடான் மாடல் கருமையானத் தோலுக்கான கின்னஸில் இடம் பிடித்தாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சூடான் மாடல் நயாகிம் கேட்வெக், அரிதான கருப்பு அழகு.  பூமியில் இதுவரை கண்டிராத இருண்ட தோலுக்கான கின்னஸ் புத்தகத்தில் அவர் நுழைகிறார்.  இது கருப்பு கல் அல்லது கிரானைட் குறித்த கலைப்படைப்பு அல்ல. உடல் எல்லாம் சதை மற்றும் இரத்தத்தால் ஆணவள், உண்மையானவள் & அவள் அழகானவள்.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

சூடான் நாட்டைச் சேர்ந்த மாடல் நயாகிம் கேட்வெக் என்பவர் இருண்ட தோலுக்கான கின்னஸில் இடம்பிடித்து உள்ளார் என பரவும் பதிவை காண நேரிட்டது. இதே தகவல் இந்திய அளவில் பல மொழிகளிலும், சர்வதேச அளவிலும் பரவி இருக்கிறது என்பதை அறிய நேர்ந்தது. அப்புகைப்படத்தில் இருக்கும் பெண் யார், கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தாரா என ஆராய்ந்து பார்த்தோம்.





உண்மை என்ன ?

சூடான் மாடல் நயாகிம் கேட்வெக் எனத் தேடினால் அவரின் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் குவிந்து உள்ளன. எனினும், பிரபல மாடல் நயாகிம் கேட்வெக் தன்னுடைய இருண்ட தோலுக்கான கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் என பரவும் தகவல் தவறானது. இப்படி பரவும் தகவலுக்கு கடந்த ஏப்ரல் மாதமே உலக கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Twitter link | archive link

அதுமட்டுமின்றி, @iChopTweets எனும் ட்விட்டர் பக்கத்தில் சூடான் மாடல் நயாகிம் கேட்வெக் உடன் நடத்திய உரையாடலின் ஸ்க்ரீன்ஷார்ட் பகிரப்பட்டு உள்ளது. அதில், நயாகிம் கேட்வெக் வைரலாகும் தகவலை மறுத்து இருந்துள்ளார்.



Twitter link | archive link 

முடிவு :

நம் தேடலில், சூடான் மாடல் நயாகிம் கேட்வெக் பூமியில் இதுவரை கண்டிராத இருண்ட தோலுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் என பரவும் தகவல் தவறானது என அறிந்து கொள்ள முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க