YouTurn

திருப்பூரில் துறைமுகம் அமைப்போம் என்றாரா ஸ்டாலின் ?

திருப்பூரில் துறைமுகம் அமைப்போம் என்றாரா ஸ்டாலின் ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திமுக தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பூரில் துறைமுகத்தை கொண்டு வருவோம் என கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலே இல்லாத திருப்பூர் பகுதியில் துறைமுகம் கொண்டு வருவதாக ஸ்டாலின் பேசியுள்ளார் என கிண்டல் செய்து வருகின்றனர். மீம்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியின்...

பரவிய செய்தி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழில் நகரமாம் திருப்பூரில் புதிய துறைமுகம் கொண்டு வருமோம் – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

விரிவான விளக்கம்

திமுக தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பூரில் துறைமுகத்தை கொண்டு வருவோம் என கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலே இல்லாத திருப்பூர் பகுதியில் துறைமுகம் கொண்டு வருவதாக ஸ்டாலின் பேசியுள்ளார் என கிண்டல் செய்து வருகின்றனர்.

மீம்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரே தங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிட்டு உள்ளனர். News 7 செய்தி நிறுவனத்தின் Breaking news பதிவில் ஸ்டாலின் கூறியது இடம்பெற்றது போன்று பதிவிட்டு வருகின்றனர்.



சமீபகாலமாக சமூக வலைதளங்களில் செய்தி நிறுவனங்களின் Breaking news என்று போட்டோஷாப் செய்து பதிவிடுவது அதிகரித்து வருகிறது. சிலரை கேலி செய்வதற்காகவே செய்தி நிறுவனத்தின் Breaking news என போட்டோஷாப் செய்வது வழக்கம்.

ஜனவரி 30-ம் தேதி ஈரோட்டுக்கு சென்ற ஸ்டாலின் கலைஞர் சிலையை திறந்து வைத்த பிறகு திருப்பூரில் துறைமுகம் அமைக்கப்படும் எனக் கூறியதாக எந்தவொரு செய்தியிலும் வெளியாகவில்லை.

சமூக வலைதளங்களில் கட்சி ஆதரவாளர்கள் தாங்கள் பார்ப்பதை உண்மையா என அறியாமல் பகிர்ந்து விடுகின்றனர் என்றால், கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் கூட அறியாமலேயேவா பகிர்வது.



தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பற்றிய போலியான Breaking news பதிவுடன் “ திருப்பூரில் துறைமுகமா ! ஒன்பது கிரகங்கள் உச்சத்தில் இருக்கும் ஒருவரால் தான் இந்த லெவலுக்கு யோசிக்க முடியும் “ என பதிவிட்டு உள்ளனர்.



ஆனால், ஸ்டாலின் பற்றி அப்படி ஒரு செய்தியே வெளியிடவில்லை என தமிழக பிஜேபி கட்சியை tag செய்து News 7 செய்தி நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.



ஆகையால், சில மணி நேரங்களில் பிஜேபி பக்கத்தில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. மேலும், பிற ஊடகத்தின் பெயரிலும் இதே பதிவுகள் போட்டோஷாப் செய்து பதிவிடப்படுகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.