
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
நேற்று ஸ்ரீநகரில் மீண்டும் கல்லெறியும் கலாச்சாரத்தை துவங்கிய பாகிஸ்தான்காரனுக்கு பிறந்த பன்றிகளை ஒரே போடாக போட்டுத் தள்ளியது இந்திய இராணுவம்.!🔥🚩🇮🇳 pic.twitter.com/rF0E5U5dhS
— Sathya_14 (@14Sathya) August 18, 2022
Archive link
இதே வீடியோவை “ஸ்ரீநகரில் மீண்டும் கல்லெறியும் கலாச்சாரத்தைத் துவங்கிய பாகிஸ்தான் காரனுக்குப் பிறந்த பன்றிகளை ஒரே போடாக போட்டுத் தள்ளியது இந்திய ராணுவம்” என்ற வாசகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்பட்ட வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்ததில், கடந்த ஆகஸ்டு 8ம் தேதி Red bolivision என்ற வலைத்தளத்தில் இந்த காணொளி பற்றிய செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

இச்சம்பவம் பொலிவியா நாட்டில் நடைபெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக அங்குள்ள கோக்கோ விவசாயிகள் "parallel market" என்ற திட்டத்தை எதிர்த்து அந்நாட்டு அரசுக்கு எதிராகப் போராடி வந்துள்ளனர். போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு எதிர் வினையாகப் போராட்டக்காரர்களில் ஒருவர் தான் தயாரித்த வெடிகுண்டினை வீசியுள்ளார். மற்றொரு வெடிகுண்டினை தனது இடது கையில் வைத்திருக்கையில் எதிர்பாராத விதமாக அது வெடித்துள்ளது.

மிகுந்த காயத்திற்குள்ளான அந்நபரை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததில், மிக இக்கட்டான நிலையில் அவர் உயிர் தப்பியதாகவும், இருப்பினும் அவர் தனது இடது கையினை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
#Bolivia : A street fight between Police and drug dealers , apparently they don’t shoot they throw grenades 😂 pic.twitter.com/ylnnV0cjhr
— Aham B Hāʃmī Tkhbç (@AbramHasmi) August 13, 2022
முடிவு :
நம் தேடலில், ஸ்ரீநகரில் கல்லெறிந்த நபரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாகப் பரப்பப்படும் வீடியோ மற்றும் தகவல் பொய்யானது. வைரல் செய்யப்படும் வீடியோ பொலிவியாவில் நிகழ்ந்தது என அறிய முடிகிறது.