YouTurn

ஸ்டாலின் ஆட்சியின் கீழ் இலங்கை வர வேண்டும் எனக் கூறியதாக செந்தில் வேல் பெயரில் போலி ட்வீட் !

ஸ்டாலின் ஆட்சியின் கீழ் இலங்கை வர வேண்டும் எனக் கூறியதாக செந்தில் வேல் பெயரில் போலி ட்வீட் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! அசாதாரண சூழ்நிலையில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ஒரே தீர்வு,தலைமன்னாரை தாண்டி இருக்கும் தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவர் ஸ்டாலினின் அதிகாரத்தின் கீழ் இலங்கையை கொண்டுவர வருவதே !!

Facebook link

விரிவான விளக்கம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எழுந்த எதிர்ப்பால் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இலங்கையின் அசாதாரண சூழலை சமாளிக்க மு.க.ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் இலங்கையை கொண்டு வர வேண்டும் என ஊடகவியலாளர் செந்தில் வேல் கூறியதாக ட்வீட் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

பரவும் ட்வீட் குறித்து தேடுகையில், ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் இயங்கும் @senthillvel79 எனும் போலியான ட்விட்டர் பக்கத்தில் மே 10-ம் தேதி, " கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! அசாதாரண சூழ்நிலையில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ஒரே தீர்வு,தலைமன்னாரை தாண்டி இருக்கும் தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவர் ஸ்டாலினின் அதிகாரத்தின் கீழ் இலங்கையை கொண்டுவர வருவதே !! " என ட்வீட் வெளியாகி இருக்கிறது.



Archive link 

இதே போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியான தவறான பதிவுகள் சிலவும் ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. மேலும், தமிழ் கேள்வி மற்றும் செந்தில்வேல்  கூறியதாக வேறு சில பொய் செய்திகளை நாம் பதிவிட்டு உள்ளோம்.

மேலும் படிக்க : வில் ஸ்மித் ஆஸ்கர் விருது பெற்றதை செந்தில்வேல் விமர்சித்ததாக பரவும் போலி ட்வீட் !

மேலும் படிக்க : எரிபொருள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என அண்ணாமலை கூறியதாகப் போலிச் செய்தி !

மேலும் படிக்க : ஊடகவியலாளர் செந்தில் வேல் பெயரில் பரவும் போலிச் செய்தி, போலி ட்வீட் !

முடிவு :

நம் தேடலில், அசாதாரண சூழ்நிலையில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ஒரே தீர்வு, தலைமன்னாரை தாண்டி இருக்கும் தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவர் ஸ்டாலினின் அதிகாரத்தின் கீழ் இலங்கையை கொண்டுவர வருவதே என ஊடகவியலாளர் செந்தில் வேல் பதிவிட்டதாக பரவும் ட்வீட் போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க