யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மனநலம் பாதிக்கப்பட்டவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவர் குரங்குபோல் நடந்து கொண்டுள்ளார்.
பரவிய செய்தி
சிவகங்கை மாவட்டத்தில் குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென குரங்கு போன்று தாவிய நிகழ்வு!!!?? அது எப்படி???
விரிவான விளக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் என்று குரங்குபோல் நடந்துகொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென குரங்கு போன்று தாவிய நிகழ்வு🤔🤔🤔 pic.twitter.com/u1T8kpk4y8
— Aspin C. S. Kiruba (@KirubaAspin) August 19, 2024
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோ தொடர்பாக ’அரசியல் டுடே’ என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்ததைக் காணமுடிந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச்சென்ற நிலையில் அங்கு மனநல மருத்துவர் இல்லாததால், ஆம்புலன்ஸ் உதவியுடன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆம்புலன்ஸில் இருந்து இறங்க மறுத்த சரவணன் ஒரு கட்டத்தில் அங்கிருந்த இரும்பு கேட்டின் மீது ஏறி குரங்குபோல் நடந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவைதான் குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் குரங்குபோல் கேட்டின் மீது ஏறி சேட்டை செய்கிறார் எனத் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
முடிவு:
குரங்கு கடிக்குச் சிகிச்சை பெற்று வந்தவர் குரங்குபோல் நடந்து கொண்டதாகப் பரவும் தகவல் தவறானது. மனநலம் பாதிக்கப்பட்ட நபரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது கேட்டின் மீது ஏறி குரங்குபோல் நடந்துகொண்டுள்ளார்.