YouTurn

செங்கோலுக்கு பதிலாக திப்பு சுல்தான் வாளை வைக்க வேண்டும் என சுகி சிவம் கூறியதாகப் பரவும் பொய் !

செங்கோலுக்கு பதிலாக திப்பு சுல்தான் வாளை வைக்க வேண்டும் என சுகி சிவம் கூறியதாகப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

புதிய நாடாளுமன்றத்தில் நந்தி வடிவில் செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது. - ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம்

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

1947 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்தின் போது ஜவஹர்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோலை, ஒன்றிய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைப்பதாக முடிவு செய்தது.

அதன்படி 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றாக நேற்று (மே 28) திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், ஆதீனங்கள் சார்பில் செங்கோலானது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆன்மிக சொற்பொழிவாளரான சுகி சுவம், புதிய நாடாளுமன்றத்தில் நந்தி வடிவில் செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது என்று கூறியதாக U2 BRUTUS யூடியூப் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



Archive Link



Archive Link

உண்மை என்ன ?

இதுகுறித்து ஆய்வு செய்து பார்த்ததில், சுகி சிவம் "ஒரு உயிரற்ற பொருளை டெல்லியில் உயர்த்திப் பிடிப்பதால் தமிழும் வளராது தமிழர் வாழ்வும் மேம்படாது" என்று கூறியதாக மற்றொரு நியூஸ் கார்டும் சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதை காண முடிந்தது.



Archive Link

ஆகையால், சுகி சிவம் அவர்களின் அதிகாரப்பூர்வமான யூடியூப் பக்கமான Suki Sivam Expressions என்னும் பக்கத்தில் தேடியதில், இறுதியாக கடந்த மே 27 அன்று 'குடியைக் கெடுக்கும் குடி' என்னும் தலைப்பில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அதில் குடியை குறித்து பேசுவதற்கு முன்பு, பரவி வரும் நியூஸ் கார்டுக்கு எதிராக அவர் தனது கண்டங்களை தெரிவித்திருப்பதை காண முடிந்தது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான Suki Sivam சுகிசிவம் - The Great Philosopher எனும் பக்கத்தில் தனது கண்டனப் பதிவை பதிவிட்டுள்ளார்.



அதில் "புதிய பாராளுமன்றத்தில் அமைந்துள்ள செங்கோல் பற்றி நான் கூறியதாக ஒரு பொய்யான தகவலை என் படத்துடன் சில சமூக விரோதிகள் வெளியிட்டுள்ளனர். என் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் உள்நோக்குடன் செய்தி பரப்புகிறவர்கள் மீது என் பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன். சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும், வைரல் செய்யப்படும் கார்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள U2 BRUTUS யூடியூப் சேனலும், நாங்கள் இந்த நியூஸ் கார்டை வெளியிடவில்லை என்று கூறியுள்ளது. இதன் மூலம் பரவி வரும் இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியானவை என்பதை அறிய முடிகிறது.



மேலும் படிக்க: பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என சுகி சிவம் கூறினாரா ?

இதற்கு முன்பும் பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என்று சுகி சிவம் கூறியதாக பரவி வந்த செய்திகள் குறித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

முடிவு:

நம் தேடலில், 'புதிய நாடாளுமன்றத்தில் திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பு' என்றும், 'ஒரு உயிரற்ற பொருளை டெல்லியில் உயர்த்திப் பிடிப்பதால் தமிழும் வளராது தமிழர் வாழ்வும் மேம்படாது' என்றும் சுகி சிவம் கூறியதாகப் பரவி வரும் இரண்டு கார்டுகளும் போலியானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க