YouTurn

சிறைக்கு பயமெனில் விசத்தை குடியுங்கள் என சீமான் கூறியதாகப் போலிச் செய்தி !

சிறைக்கு பயமெனில் விசத்தை குடியுங்கள் என சீமான் கூறியதாகப் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சிறைதான் சிந்தனையைச் செதுக்கும் பட்டறை. தொண்டர்களை பிணையெடுப்பது மட்டுமே கட்சியின் பணி அல்ல. சிறைக்கு பயமெனில் விசத்தைக் குடித்து சாவுங்கள் - சீமான், நாம் தமிழர் கட்சி.

விரிவான விளக்கம்

அவதூறு, வதந்தி பரப்புவதாக சீமான் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவதும், பொதுக்கூட்டத்தில் அவர்கள் மீது தாக்குதல் நிகழ்வதும் என சமீப காலங்களில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்புடைய பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப் பதிவதும், சிறைக்கு செல்வதும் புதிதல்ல.





Archive link 

இந்நிலையில், தொண்டர்களை பிணையெடுப்பது மட்டுமே கட்சியின் பணி அல்ல. சிறைக்கு பயமெனில் விசத்தைக் குடித்து சாவுங்கள் என சீமான் கூறியதாக தந்திடிவி நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

ஒரு கட்சித் தலைவர் தன் தொண்டர்களை சிறையில் இருந்து பிணையெடுக்க மாட்டோம் என நேரடியாக கூறுவதில்லை. இப்படியொரு கருத்தை சீமான் கூறியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. டிசம்பர் 20-ம் தேதியன்று இதுபோன்ற டெம்ளேட் வடிவில் எந்த செய்தியையும் தந்திடிவி முகநூல் பக்கம் வெளியிடவில்லை.



தந்திடிவி நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். சீமான் குறித்து பரவும் நியூஸ் கார்டு போலியானது என தந்திடிவி சேனலும் தெரிவித்து உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், சிறைதான் சிந்தனையைச் செதுக்கும் பட்டறை. தொண்டர்களை பிணையெடுப்பது மட்டுமே கட்சியின் பணி அல்ல, சிறைக்கு பயமெனில் விசத்தைக் குடித்து சாவுங்கள் என சீமான் கூறியதாக பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க