YouTurn

குழந்தைகளின் கன்னத்தில் முத்திரை வைத்த சிறைக்காவலர்.

குழந்தைகளின் கன்னத்தில் முத்திரை வைத்த சிறைக்காவலர்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

மத்தியப் பிரதேசம் போபால் சிறையில் உள்ள உறவினரை பார்க்க சிறுமியும் , அவளது தம்பியும் தங்களது குடும்பத்தினருடன் சென்றுள்ளனர் . சிறைசாலையின் விதிமுறைகளின்படி கைதிகளை பார்க்க வருபவர்களின் கைகளில் சிறைச்சாலையின் முத்திரையை குத்துவது வழக்கம் . ஆனால் சிறை அதிகாரிகள் தவறுதலாக உறவினரை பார்க்க வந்த...

பரவிய செய்தி

ரக்ஸா பந்தன் அன்று போபால் சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற குழந்தைகளின் கன்னத்தில் அதிகாரிகள் சிறை முத்திரையை வைத்துள்ளனர் .

விரிவான விளக்கம்

 மத்தியப் பிரதேசம் போபால் சிறையில் உள்ள உறவினரை பார்க்க சிறுமியும் , அவளது தம்பியும் தங்களது குடும்பத்தினருடன் சென்றுள்ளனர் . சிறைசாலையின் விதிமுறைகளின்படி கைதிகளை பார்க்க வருபவர்களின் கைகளில் சிறைச்சாலையின் முத்திரையை குத்துவது வழக்கம் . ஆனால் சிறை அதிகாரிகள் தவறுதலாக உறவினரை பார்க்க வந்த குழந்தைகளின் கன்னத்தில் சிறை முத்திரையை குத்தியுள்ளனர் .


   குழந்தைகளின் கன்னத்தில் சிறை முத்திரை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த புகைப்படங்களை பார்த்த பின்னர் மனித உரிமை ஆணையம் இப்பிரச்சனையை கையில் எடுத்துள்ளது . ஆகஸ்ட் 7 ஆம் தேதி  திங்கள்கிழமையன்று ரக்ஸா பந்தன் என்பதால் கைதிகளை காண அதிகளவில் உறவினர்கள் வந்துள்ளனர் . கூட்ட நெரிசலில் கைகளுக்கு பதிலாக குழந்தைகளின் கன்னத்தில் முத்திரையை குத்தி உள்ளனர் .


 இச்சம்பவம் பற்றி போபால் மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் டினேஷ் நர்கவ் கூறுகையில் , குழந்தைகளின் கன்னங்களில் முத்திரையானது தெரியாமால் குத்தப்பட்டு இருக்கலாம் . இதற்கான காரணம் ரக்ஸா பந்தன் அன்று கைதிகளை பார்க்க 8500 க்கும் அதிகமான பெண்கள் , குழந்தைகள் வந்துள்ளனர் .


கூட்ட நெரிசலில் தவறுதலாக குழந்தைகளின் கன்னத்தில் சிறை முத்திரையை குத்தி இருக்கலாம் . மேலும் இச்சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது . சிறை அதிகாரி வேண்டுமென்றே இவ்வாறு செய்திருந்தால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .


 இச்சம்பவம் குறித்து தெளிவான அறிக்கையை ஒரு வாரத்தில் அளிக்குமாறு சிறைத்துறைக்கு அம்மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது . இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச சிறைத்துறை அமைச்சர் குசும் மெஹ்டெலே தெரிவித்துள்ளார் .

சுருக்கமாக

போபால் மத்திய சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற குழந்தைகளின் கன்னத்தில் சிறை முத்திரை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.