YouTurn

SBI-யின் டெபிட் & கிரெடிட் கார்டுகளை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

SBI-யின் டெபிட் & கிரெடிட் கார்டுகளை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது, எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது உபயோகித்து வரும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை 2018 டிசம்பர் 31க்கு பிறகு பயன்படுத்த...

பரவிய செய்தி

டிசம்பர் 31-ம் தேதிக்குள் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளவும். 2019 ஜனவரி 1-ல் இருந்து பழையக் கார்டுகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதாவது, எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது உபயோகித்து வரும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை 2018 டிசம்பர் 31க்கு பிறகு பயன்படுத்த முடியாது என்ற தகவல் மக்களிடையே ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதற்கான காரணத்தையும் எஸ்.பி,ஐ அளித்துள்ளது.



சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட உத்தரவை பின்பற்றி எஸ்.பி.ஐ வங்கியானது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் Magstripe-ஐ கொண்டு இயங்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு பதிலாக “ Europay,Mastercard, visa “ (EMV) chip மற்றும் PIN-ஐ மையமாகக் கொண்டு (PoS) செயல்படும் புதிய கார்டுகளை வழங்க உள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.



டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து மக்களின் பணம் திருடப்படுவதை தடுக்கவே EMV chip முறையை கொண்டு வந்துள்ளதாகவும், Magstripe முறையை விட EMV chip முறை மிகவும் பாதுகாப்பானது எனவும் RBI அறிவித்து உள்ளது.

இதற்கு முன்பாகவே 2016-ம் ஆண்டில் RBI, வங்கிகளில் புதியக் கணக்கை தொடங்குபவர்களுக்கு EMV chip-ஐ மையமாகக் கொண்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டும் என உத்தரவு விட்டது.

EVM chip-ஐ கொண்டு இயங்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இறுதி நாட்களில் சென்று தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பதற்கு டிசம்பர் 31க்கு முன்பே வாடிக்கையாளர்கள் தங்களின் Magstripe டெபிட், கிரெடிட் கார்டுகளை மாற்றிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் Magstripe மையமாகக் கொண்டு இயங்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து வந்தால் உடனடியாக எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளவும்.

சுருக்கமாக

2018 டிசம்பர் 31-க்குள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் Magstripe கார்டுகளுக்கு பதிலாக “ Europay, Mastercard, visa “ (EMV) chip பொருந்திய கார்டுகள் எஸ்.பி.ஐ வங்கியில் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.