YouTurn

சசிகலா ஆதரவு சமூகம் குற்றப்பரம்பரையினர் என சி.வி.சண்முகம் கூறியதாக வதந்தி !

சசிகலா ஆதரவு சமூகம் குற்றப்பரம்பரையினர் என சி.வி.சண்முகம் கூறியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சசிகலா தன்னுடைய பலமாக கருதும் சமூகம் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப்பரம்பரை என முத்திரை குத்தப்பட்டவர்கள். குற்றச் செயல்கள் புரிவது அவர்கள் ரத்தத்திலேயே இருக்கிறது - அமைச்சர் சி.வி.சண்முகம்.

விரிவான விளக்கம்

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வி.கே.சசிகலா பலமாக கருதும் சமூகம் குற்றப்பரம்பரையினர் எனக் கூறியதாக நாரதர் மீடியா எனும் முகநூல் பக்கத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தலத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, நாரதர் மீடியா முகநூல் பக்கங்களை ஆராய்கையில், அப்படி எந்தவொரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. மேலும், பரப்பப்படும் நியூஸ் கார்டில் லோகோ மற்றும் தேதி என எதுவும் இல்லை. எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு எனத் தெளிவாய் புரிகிறது.



பிப்ரவரி 6-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம், சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாக பரபரப்பாக பேசி இருந்தார். இதையடுத்தே, இப்படியொரு எடிட் நியூஸ் பரப்பப்பட்டு உள்ளது.



Twitter link | Archive link 

இந்நிலையில், " சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சில சமூகத்தினரை விமர்சனம் செய்து பேசியதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவுகிறது. அதிமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்த இதுபோன்ற தவறான நோக்கத்தோடு அரசியல் எதிரிகள் பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். இது முற்றிலும் தவறான செய்தி " என அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க