
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
Facebook link | Archive link
விரிவான விளக்கம்
Facebook link | Archive link
இப்படி பாஜகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார் குறித்து வைரல் செய்யப்படும் பதிவுகளில் சரவணகுமார் புகைப்படத்திற்கு பதிலாக பூ.கொ.சரவணன் எனும் மற்றொரு ஐஆர்எஸ் அதிகாரியின் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கேஸ் அடுப்பு ரிப்பேர் செய்யும் ஒரு எளிய பணியாளர் மகன் என பூ.கொ.சரவணன் குறித்த தகவல்களையும் இணைத்து இருக்கிறார்கள்.
அன்பார்ந்த பாஜக தொண்டர்களே.என் பெயர் பூ.கொ.சரவணன்.சரவணகுமார் அல்ல.நான் இன்னமும் அரசுப்பணியில் இருக்கிறேன்.அரசியலில் களம்கண்டிருக்கும் மேனாள் IRS அதிகாரி சரவணகுமரன் அமமுக-ல் இருந்தவர்.அவர் பெயர்,என் புகைப்படம், வாசிப்புப்பயணத்தை கலந்து செய்த கற்பனைக்கிச்சடி உண்மையில்லை.நன்றி
— Poo.Ko.SARAVANAN பூ.கொ.சரவணன் (@PUKOSARAVANAN) October 12, 2020
Twitter link | Archive link
" அன்பார்ந்த பாஜக தொண்டர்களே. என் பெயர் பூ.கொ.சரவணன். சரவணகுமார் அல்ல. நான் இன்னமும் அரசுப் பணியில் இருக்கிறேன். அரசியலில் களம்கண்டிருக்கும் மேனாள் IRS அதிகாரி சரவணகுமரன் அமமுக-ல் இருந்தவர். அவர் பெயர்,என் புகைப்படம், வாசிப்புப் பயணத்தை கலந்து செய்த கற்பனைக்கிச்சடி உண்மையில்லை. நன்றி " என தன்னைப் பற்றி பரவும் புரளிகளுக்கு பூ.கொ.சரவணன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார் பாஜகவில் இணைந்ததாக புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
Welcome @khushsundar @MadanRavichand4 & Saravana Kumar (former IRS Officer) to @BJP4India & @BJP4TamilNadu family.
Era of developmental and politics of - Nation First - will accelerate further! @Murugan_TNBJP @CTRavi_BJP @blsanthosh @JPNadda pic.twitter.com/cRsitbLX2Z
— K.Annamalai (@annamalai_k) October 12, 2020
Twitter link | Archive link

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களின் மருமகன் ஆவார். 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய வருவாய் பணி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கடந்த 2017-ல் விருப்ப ஓய்வு பெற்று மத்திய அரசு பணியில் இருந்து விலகினார். அரசு பணியில் இருந்து விலகிய பிறகு டி.டி.வி தினகரன் கட்சியில் செய்தித்தொடர்பாளராக ஓராண்டு இருந்தார். பின்னர் கட்சியில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
சரவணகுமார் குறித்து எழுதுவதற்கு பதிலாக பணியில் இருக்கும் பூ.கொ.சரவணன் அவர்களின் புகைப்படத்தையும், அவர் வாழ்க்கை குறித்த தகவல்களையும் இணைத்து பரப்பி வருகிறார்கள் என அறிந்து கொள்ள முடிகிறது.