YouTurn

சலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா ?| காவல்துறை மறுப்பு.

சலூன் கடைகளை காலையில் திறக்க அனுமதியா ?| காவல்துறை மறுப்பு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஏப்ரல் 14-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு பின்னர் நேர நிர்ணயம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகளை காலை 7 மணி முதல் 10 மணி வரையில் திறந்து...

பரவிய செய்தி

சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க அனுமதி.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

ஏப்ரல் 14-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு பின்னர் நேர நிர்ணயம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகளை காலை 7 மணி முதல் 10 மணி வரையில் திறந்து வைக்க அரசு அனுமதி அளித்து உள்ளதாக செய்திகளில் வெளியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



News link | archive link 

அப்படி வெளியான தகவலுக்கு காவல்துறை தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சலூன் கடைகளை காலை 7 மணி முதல் 10 மணி வரை திறந்து வைக்க எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.



Facebook link | archive link 

ஏற்கனவே ரேசன் கடைகளில் வழங்கப்படும் 1000 ரூபாய் மற்றும் ரேசன் பொருட்களுக்கு மக்கள் கூட்டமாய் அடித்து பிடித்து செல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், சலூன் கடைகளை திறந்தால் ஆண்களின் கூட்டம் அதிகம் வர வாய்ப்புகள் இருக்கின்றன.

இதேபோல், மருத்துவமனைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக் கூடாது, ஆம்புலன்ஸ் மூலமே செல்ல வேண்டும் என செய்திகளில் வெளியான தகவலையும் காவல்துறை மறுத்துள்ளனர். அரசின் உத்தரவுகள் உரிய முறையில் வெளியாகும், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என காவல்துறை தெரிவித்து உள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…