YouTurn

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்திய மோடி.. தொடங்கியது பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் !

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்திய மோடி.. தொடங்கியது பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ரஷ்யா உக்ரைன் போரில் 32,000 இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்துள்ளனர். புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இருவரிடம் பேசி பிரதமர் மோடி போரை நிறுத்தினார். உக்ரைனில் சிக்கிய மாணவர்கள் மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டனர்- ஜே.பி. நட்டா



Article Link | Archive Link

விரிவான விளக்கம்

ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த போரின் போது உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்க புதின் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரிடமும் பேசி பிரதமர் மோடி போரை நிறுத்தினார். பின்பு உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்கள் மீட்கப்பட்டு இந்திய கொண்டு வரப்பட்டனர் என பாஜக தலைவர் ஜே.பி நட்டா பேசியுள்ளார். இதனைப் பாஜகவின் தேசிய மற்றும் ராஜஸ்தான் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.



Article Link | Archive Link

இதற்கு முன்பாக, 2022 மார்ச் 5ம் தேதி உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க இரு நாட்டு தலைவர்களிடமும் பேசி போரை 6 மணி நேரம் நிறுத்தியதாகத் தமிழகப் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி இருந்தார்.



Twitter link 

உண்மை என்ன ?

இந்தியப் பிரதமர் மோடியால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் சுமார் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டது எனப் பரவி வரும் செய்தி பொய்யான தகவல் என 2022 மார்ச் 5ம் தேதி அன்றே Youturn தரப்பில் Fact Check செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

படிக்க : ரஷ்யா-உக்ரைன் போரை 6 மணி நேரம் இந்தியா நிறுத்தியதாக வதந்தி!

இருப்பினும், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் என்பதால் பாஜக தலைவர் ஜே.பி நட்டா மீண்டும் இந்தப் பொய்யைப் பேசியுள்ளார்.

போர் நடந்த போது கார்கிவில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்திய மக்களும் தங்களது சொந்த பாதுகாப்புக்காகக் கார்கிவை விட்டு வெளியேறி பாபே மற்றும் பெஸ்லியுவ்டோவ்காவை அடையுமாறு 2022 மார்ச் 2ம் தேதி இந்திய தூதரகம் ஆலோசனை வழங்கி இருந்தது. ஆனால், பிரதமர் மோடி புதின் மற்றும் ஜெலன்ஸ்கியிடம் பேசி போரை நிறுத்தச் சொன்னதாக அதில் ஏதும் குறிப்பிடவில்லை.



Twitter link 

மேலும், கார்கிவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷ்யா 6 மணி நேரம் போரை நிறுத்தியுள்ளது என வெளியான செய்தியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளதாக என இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் சுஹாசினி மார்ச் 3ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.



Twitter link 

மார்ச் 3-ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில்(39:30 நிமிடம்), " போர் நிறுத்தப்பட்டதா, நிறுத்தப்படலையா அல்லது யார் நிறுத்தினார் என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.



மேலும், " இதுதான் செல்லக்கூடிய வகையில் இருக்கும் பாதை எனக் குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தன. ஆகையால், இந்த நேரத்தில் செல்ல வேண்டிய இடங்கள் இவை என நாங்கள் மக்களுக்கு தெரிவித்தோம். யாரோ குண்டுவெடிப்பை (இடைநிறுத்துகிறார்கள்) நடத்துகிறார்கள் அல்லது இதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம் எனக் கூறுமளவிற்கு அதை விரிவுப்படுத்துவது என்பது முற்றிலும் தவறானது என்று நான் நினைக்கிறேன் ” எனப் பேசி இருக்கிறார்.

இந்திய மாணவர்களை மீட்கும் பணிக்காக ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துமாறு இந்திய தரப்பில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. எனினும், உக்ரைனுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீட்பு பணிக்காக, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாகப் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

முடிவு :

நம் தேடலில், உக்ரைனில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியே வருவதற்காக இந்தியா 6 மணி நேரம் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தியதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. இந்த பொய்யை அடிப்படையாக வைத்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இருவரிடம் பேசி பிரதமர் மோடி போரை நிறுத்தியதாக பேசி இருக்கிறார் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க