YouTurn

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்குள் தர்கா அமைந்துள்ளதாகப் பரவும் வதந்தி!

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்குள் தர்கா அமைந்துள்ளதாகப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிலேயே ‘ஹமீத் அவ்லியா தர்கா’ இருக்கிறது. இதை தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

தர்கா கோயிலில் இருக்கா??


 X Link | Archive Link

விரிவான விளக்கம்

காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் சாமி தரிசனம் செய்தது குறித்து கடந்த வாரம் புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் பதிவு செய்த புகைப்படங்களைக் குறிப்பிட்டு, ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் தர்கா உள்ளதா என்று குறிப்பிட்டு பலரும் அவர் தர்காவில் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், அது ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்குள் அமைந்துள்ள தர்கா அல்ல என்பதை உறுதி செய்ய முடிந்தது. 


காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் ‘ஹஜ்ரத் சையத் ஷாஹ் ஹமீது அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா’ இருக்கிறது. 



இந்நிலையில் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான் பாண்டியன், அருகில் உள்ள ஹமீத் அவ்லியா தர்காவிற்கும் சென்றுள்ளார். கோவில், தர்கா ஆகியவற்றின் புகைப்படத்தை ஒன்றாக பதிவிட்டுள்ளார். இதனை தவறாக புரிந்துகொண்டு கோவிலுக்குள் தர்கா இருப்பதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்புகின்றனர்.



பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமைந்துள்ள இந்த தர்கா குறித்தும், அங்கு சந்தனக்குட உருஸ் உத்சவம் விழா நடைபெறுவது குறித்தும் செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


முடிவு: 


நம் தேடலில், காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்குள் தர்கா அமைந்துள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க