YouTurn

ரோம் நாட்டில் விநாயகர் வழிபாடா ?

ரோம் நாட்டில் விநாயகர் வழிபாடா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்து மதத்தில் முதற்கண் கடவுளான விநாயகர் மிகவும் பிரசித்து பெற்றவர். விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி இந்து மதம் பரவி உள்ள மற்ற நாடுகளிலும் நடைபெறுகிறது. எனினும், இந்து கடவுள் தோற்றம் குறித்த சரியான காலத்தை எவரும் அறியலர். இதற்கிடையில், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக பழமையான ரோம்...

பரவிய செய்தி

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் வழிபாடு. மிக அரியப் படம். மிகப் பழமையான ரோம் விநாயகரை நீங்களும் ஷேர் செய்யுங்கள்.

விரிவான விளக்கம்

இந்து மதத்தில் முதற்கண் கடவுளான விநாயகர் மிகவும் பிரசித்து பெற்றவர். விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி இந்து மதம் பரவி உள்ள மற்ற நாடுகளிலும் நடைபெறுகிறது. எனினும், இந்து கடவுள் தோற்றம் குறித்த சரியான காலத்தை  எவரும் அறியலர்.



இதற்கிடையில், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக பழமையான ரோம் நாகரீகத்தில் கூட விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. ரோம் நாட்டிலேயே சிவன் மற்றும் பார்வதியின் மகனான யானையின் தலையைக் கொண்ட விநாயகரை வழிபாடு உள்ளனர். ரோம் நாட்டில் வணங்கிய விநாயகரின் அரியப் படத்தை அனைவரும் பகிருங்கள் என்று இப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் பரவி வந்துள்ளன. பல ஆண்டுகளாக இந்த செய்தி உண்மை என நம்பப்பட்டு வந்துள்ளது.

East Indies :

 தென்கிழக்கு இந்தியா என்பது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியது. EAST INDIES என்பது மலேசியா, இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளை குறிக்கும்.

இத்தகைய ஈஸ்ட் இண்டீஸ் பகுதியில் இந்து மதத்தின் அடையாளங்கள் பரவலாக உள்ளன. இந்து மத நம்பிக்கை இங்குள்ள பல நாடுகளில் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

Quvenevadi :  



"  இந்து மத கடவுளான ixora என்றழைக்கப்படும் சிவனின் மகன் தான் Quvenevadi(விநாயகர்). 1723-1734 ஆம் ஆண்டுகளில் இந்த ஓவிய வேலைப்பாட்டை Bernard Picart என்பவர் செய்துள்ளார். 18-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த ஓவியம் பழமையான பொக்கிஷம் ஆகும் ".

" 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கண்கவர் தோற்றம் கொண்ட இதன் உண்மையான படத்தின் அச்சு 1789 ஆம் ஆண்டு லண்டனில் Dr. Hurd- Religious Rites & Ceremonies-க்கு வழங்கப்பட்டது ". தற்போது இந்த படத்தின் நகல்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கணபதி, விநாயகர், பிள்ளையார் என அழைக்கப்படும் இந்து மதக் கடவுளை Quvenevadi என்ற பெயரில் அழைத்துள்ளனர். Bernard Picart  18-ம் நூற்றாண்டில் இந்து மதத்தின் கடவுள்களின் தோற்றம் குறித்து செய்த ஓவிய வேலைப்பாட்டை ரோம் நாகரீகத்தை சேர்ந்தவை எனத் தவறான தகவலை பகிர்ந்து உள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.