
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link
விரிவான விளக்கம்
ரத்தன் டாடா மீது இந்திய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் இருந்து வருகிறது. எனினும், 1,500 கோடி நிதியை அளித்து விட்டு வேண்டுமென்றால் தன்னுடைய மொத்த சொத்துக்களையும் நாட்டிற்காக வழங்க தயார் என ரத்தன் டாடா கூறியதாக ஓர் தகவல் கடந்த ஆண்டில் இருந்தே பரவிக் கொண்டிருக்கிறது.
தற்போதும், கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க தன்னுடைய முழு சொத்தையும் அளிக்க தயாராக இருப்பதாக ரத்தன் டாடா கூறினார் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
The COVID 19 crisis is one of the toughest challenges we will face as a race. The Tata Trusts and the Tata group companies have in the past risen to the needs of the nation. At this moment, the need of the hour is greater than any other time. pic.twitter.com/y6jzHxUafM
— Ratan N. Tata (@RNTata2000) March 28, 2020
Twitter link
ரத்தன் டாடா தன்னுடைய மொத்த சொத்தையும் இந்தியாவிற்கு அளிக்க தயாராக இருப்பதாக கூறினார் என சமூக வலைதளங்களில் மட்டுமே சுற்றி வருகிறது. அவ்வாறான, பேச்சுகளோ, அதிகாரப்பூர்வ தகவல்களோ அல்லது செய்தியோ கூட எங்கும் வெளியாகவில்லை.
PM @narendramodi's appeal to the people of India is laudatory and we at the Tata Group, are committed to doing as much as possible to strengthen the fight against #COVID19. To mitigate the oxygen crisis, here is one such effort to boost health Infrastructure.
— Tata Group (@TataCompanies) April 20, 2021
Twitter link
" நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை அதிகரிக்கும் அரசின் முயற்சியில் உதவி செய்வதாக " டாடா குழுமம் 2021 ஏப்ரல் மாதம் ட்வீட் வெளியிட்டு இருந்தது. ரத்தன் டாடா கூறாத ஒன்றையும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள்.
ஃபார்வர்டு செய்தி 2 :

" இந்தாண்டு உயிரோடு இருப்பதே லாபத்திற்கு ஈடானது ஆகவே கனவுகள், திட்டங்கள் பற்றி கவலைப்படாமல் இருங்கள் - தொழிலதிபர் ரத்தன் டாடா " என நியூஸ் டெம்பிளேட் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
I’m afraid this too, has not been said by me. I will endeavour to call out fake news whenever I can, but would encourage you to always verify news sources. My picture alongside a quote does not guarantee me having said it, a problem that many people face. pic.twitter.com/pk0S75FxPA
— Ratan N. Tata (@RNTata2000) May 3, 2020
Twitter link
ஆனால், இப்படியொரு கருத்தை ரத்தன் டாடா கூறவில்லை. கடந்த ஆண்டில் இந்தியில் அவரின் புகைப்படத்துடன் பரவிய அதே ஃபார்வர்டு தகவலை அவரே மறுத்து ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
ஃபார்வர்டு செய்தி 3 :
கடந்த ஆண்டில், கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை காணும் என நிபுணர்கள் கூறியதற்கு ரத்தன் டாடா கூறிய கருத்து என பரவிய ஃபார்வர்டு தகவலை அவரே மறுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
This post has neither been said, nor written by me. I urge you to verify media circulated on WhatsApp and social platforms. If I have something to say, I will say it on my official channels. Hope you are safe and do take care. pic.twitter.com/RNVL40aRTB
— Ratan N. Tata (@RNTata2000) April 11, 2020
Twitter link
மேலும் படிக்க : பொருளாதாரம் குறித்து ரத்தன் டாடாவின் கருத்து என போலியான போஸ்ட் !
ரத்தன் டாடா தன்னுடைய அறிவிப்புகளை ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம். தன் பெயரை பயன்படுத்தி பரவும் தவறான தகவல்களை மறுத்து பதிவிட்ட போதும் அதையே தெரிவித்து இருப்பார்.
முடிவு :
நம் தேடலில், 1,500 கோடி மட்டுமல்ல தன்னுடைய மொத்த சொத்துக்களையும் நாட்டிற்கு அளிப்பதாக ரத்தன் டாடா கூறினார் என பரப்பப்படும் தகவல் வதந்தியே. இதுமட்டுமின்றி, ரத்தன் டாடா கூறியதாக பல போலியான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.