YouTurn

ராஜஸ்தானில் கொல்லப்பட்டவர் என யாரோ ஒருவர் படத்தை பரப்பும் அர்ஜுன் சம்பத் !

ராஜஸ்தானில் கொல்லப்பட்டவர் என யாரோ ஒருவர் படத்தை பரப்பும் அர்ஜுன் சம்பத் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் இஸ்லாமிய அடிப்படைவாதி இருவரால் டெய்லர் கண்ணையா லால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர கொலையை கண்டித்து நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், டெய்லர் கண்ணையா பற்றிய பதிவுகளில் தையல் இயந்திரத்துடன் வயதான நபர் அமர்ந்து இருக்கும் ஒருவரின் படமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தின் பதிவிலும் இப்படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.





உண்மை என்ன ? 

ராஜஸ்தானில் டெய்லர் கண்ணையா கொலை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான படமும், வைரல் செய்யப்படும் இப்படமும்(Illustration) வெவ்வேறாக உள்ளது.



சமூக வலைதளங்களில் பகிரப்படும் தையல் இயந்திரத்துடன் இருக்கும் நபரின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், புகைப்பட விற்பனை தளமான shutterstock இணையதளத்தில் 2015-ம் ஆண்டு ஜோத்பூரில் எடுக்கப்பட்டதாக உண்மையான புகைப்படம் பதிவாகி இருக்கிறது.



2015-ல் ஜோத்பூரில் எடுக்கப்பட்ட வயதான டெய்லரின் படத்தை மாற்றி (Illutration) உதய்பூர் கண்ணையா மரணம் பற்றிய பதிவுகளில் தவறாக பகிர்ந்து வருகிறார்கள்.



முடிவு : 

நம் தேடலில், ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்ட டெய்லர் கண்ணையா லால் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தையல் இயந்திரத்துடன் இருக்கும் நபரின் படத்தில் இருப்பது கண்ணையா அல்ல, அது 2015-ல் shutterstock-ல் வெளியான படம் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க