YouTurn

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தி சாமியார் வேடமிட்டதாகப் பரப்பப்படும் எடிட் புகைப்படம் !

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தி சாமியார் வேடமிட்டதாகப் பரப்பப்படும் எடிட் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மக்களை ஏமாற்றிட இன்னும் எத்தனை வேடம்



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி இந்து சாமியார் வேடமணிந்து நடைபயணம் மேற்கொண்டு வருவதாக பாஜக ஆதரவாளர்கள் பலர் இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.



Archive link 



உண்மை என்ன ? 

ராகுல் காந்தி சாமியார் வேடத்தில் இருப்பதாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருப்பது தெளிவாய் தெரிகிறது. அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த போது, " டிசம்பர் 3ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணத்தில் கம்யூட்டர் பாபா கலந்து கொண்டதாக புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருக்கிறது.



மத்தியப் பிரதேசத்தின் மஹுதியா பகுதியில் கம்யூட்டர் பாபா ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்ட வீடியோ பதிவு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் டிசம்பர் 3ம் தேதி வெளியாகி இருக்கிறது.



டிசம்பர் 3ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் அப்புகைப்படம் பதிவாகி உள்ளது.



Twitter link | Archive link 

மத்தியப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கம்யூட்டர் பாபாவின் உடலுடன் ராகுல் காந்தியின் தலையை ஒட்டியும், அதேபோல் காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் தலையினை ராகுல் காந்தியுடன் எடிட் செய்தும் மாற்றி உள்ளனர்.

மேலும் படிக்க : இந்திய ஒற்றுமை யாத்திரையில் சர்ச், மசூதிக்கு போன ராகுல் காந்தி இந்துக் கோவிலுக்கு போகவில்லை என வதந்தி

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது ராகுல் காந்தி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கோவில்களுக்கு செல்லாமல், சர்ச், மசூதிகளுக்கு மட்டும் சென்றதாகவும், அதுவே வடமாநிலங்களில் நுழைந்த உடன் கோவில் கோவிலாக செல்வதாகவும் தவறான தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தி சாமியார் வேடமணிந்து செல்வதாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க