YouTurn

புதியதலைமுறை கார்த்திகைச்செல்வன் பேசியதாக பரவும் தவறான பழைய ஆடியோ!

புதியதலைமுறை கார்த்திகைச்செல்வன் பேசியதாக பரவும் தவறான பழைய ஆடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

புதிய தலைமுறை கார்திகை செல்வனை போனில் கதறவிட்ட இந்து!



Youtube link | archive link 

விரிவான விளக்கம்

முருகபக்தர் ஒருவர் புதியதலைமுறை ஊடகத்தின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் உடன் பேசியதாக ஆடியோ பதிவு ஒன்று யூடியூப் சேனல்கள் பலவற்றில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் ஆடியோ பதிவில் இருப்பது கார்த்திகைச்செல்வன் அவர்களின் குரல் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அதுமட்டுமின்றி, அவ்வாறான பதிவுகளில் கார்த்திகைச்செல்வனின் புகைப்படத்தை வீடியோவில் பயன்படுத்தி விட்டு, வீடியோவின் முகப்பு புகைப்படத்தில் புதியதலைமுறையின் நெறியாளர் கார்த்திகேயன் புகைப்படத்தை வைத்து இருக்கிறார்கள்.





Youtube link | archive link 

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் புதியதலைமுறையின் நெறியாளர் கார்த்திகேயனுடன் பேசிய ஆடியோ பதிவை கார்த்திகை செல்வன் உடன் நடந்த உரையாடல் என தவறாக பரப்பி வருகிறார்கள்.

இது தொடர்பாக புதியதலைமுறையின் நெறியாளர் கார்த்திகேயன் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய போது, " இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுபுது அர்த்தங்கள் நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவத்தால் வந்த தொலைபேசி அழைப்பு. தற்போது வைரலாகி வரும் ஆடியோ வடிவிலான வீடியோக்களை நானும் பார்த்தேன் " எனப் பதில் அளித்து இருந்தார்.



புதியதலைமுறை செய்தியில் பணியாற்றும் கார்த்திகைச்செல்வன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் ஒரே ஆள் என குழப்பிக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இது முருகன் விவகாரத்தின் போது நடைபெற்ற உரையாடல் என தவறாக பரப்பி வருகிறார்கள். இந்த ஆடியோ 2,3 ஆண்டுகளுக்கு முன்பானது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க