YouTurn

புஷ்பா படத்தை பார்ப்பவர்கள் வந்தேறிகள் என சீமான் கூறினாரா ?

புஷ்பா படத்தை பார்ப்பவர்கள் வந்தேறிகள் என சீமான் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தெலுங்கு படமான, புஷ்பா படத்தை பார்க்கும் அனைவருமே வந்தேறிகள் -சீமான் பேச்சு. நாம் தமிழர் தம்பிகள் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும்.



Archive link

விரிவான விளக்கம்

தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், தெலுங்கு படமான புஷ்பா படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் வந்தேறிகள் என சீமான் கூறியதாக புதிய தலைமுறை சேனலின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

புஷ்பா திரைப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்ததாக எந்த தகவலும் இல்லை. அவருடைய சமூக வலைதள பக்கங்களிலும் அப்படி எந்த பதிவும் வெளியாகவில்லை.

அடுத்ததாக, புதியதலைமுறை செய்தியும் முகநூல் பக்கத்தில் தேடிப் பார்க்கையில், பரப்பப்படும் நியூஸ் கார்டு மட்டுமன்றி சீமான் குறித்து 17-ம் தேதி எந்த செய்தியும் வெளியாகவில்லை.



இதுகுறித்து, புதியதலைமுறை செய்தியின் இணையதள பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், " இது போலியானது. நாங்கள் வெளியிடவில்லை " எனத் தெரிவித்து இருந்தனர்.

முடிவு : 

நம் தேடலில், தெலுங்கு படமான புஷ்பா படத்தை பார்க்கும் அனைவருமே வந்தேறிகள் என்றும், நாம் தமிழர் தம்பிகள் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் சீமான் பேசியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க