YouTurn

"பப்ஜி" விளையாட்டிற்கு பரிசு வழங்கியது தவறு தான்-எம்.பி வசந்தகுமார் பதில் !

"பப்ஜி" விளையாட்டிற்கு பரிசு வழங்கியது தவறு தான்-எம்.பி வசந்தகுமார் பதில் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜூன் 19-ம் தேதி ராகுல் காந்தி பிறந்தநாளன்று மாநில அளவில் நடத்தப்பட்ட பப்ஜி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வசந்த் & கோ உரிமையாளரும், காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் பரிசுகளை வழங்கியதாக மேற்காணும் செய்தித்தாள் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து எம்.பி வசந்தகுமார்...

பரவிய செய்தி

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி ஆன்லைன் மூலம் மாநில அளவிலான பப்ஜி விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி.வசந்தகுமார் பரிசு வழங்கினார்.



Twitter link | archive link 

விரிவான விளக்கம்

ஜூன் 19-ம் தேதி ராகுல் காந்தி பிறந்தநாளன்று மாநில அளவில் நடத்தப்பட்ட பப்ஜி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வசந்த் & கோ உரிமையாளரும், காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் பரிசுகளை வழங்கியதாக மேற்காணும் செய்தித்தாள் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எம்.பி வசந்தகுமார் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை தேடிப் பார்த்த போது எந்தவொரு பதிவுகளும் கிடைக்கவில்லை. இதையடுத்து எம்.பி வசந்தகுமார் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது, " அது எனக்கு தெரியாமல் நடந்துள்ளது. அது தப்புதான்..தப்புதான்..தப்புதான். அப்போது மொத்தமாக மேனஜர் கையில் எடுத்துக் கொடுத்ததால் கொடுத்து விட்டேன். நானே பப்ஜி விளையாடுவதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் 3 முறை பேசியுள்ளேன். பரிசு ஏதும் வழங்கவில்லை, சான்றிதழ் தான் தரப்பட்டது . மேனேஜர் கொடுத்தார் என கவனிக்காமல் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டேன். பரிசுகள் கொடுக்கவில்லை " எனத் தெரிவித்து இருந்தார்.

பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள், தற்போது தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலிகள் போன்றவற்றில் மக்கள் பலரும் மூழ்கி உள்ளனர் என்பதை நாம் அறிந்திருப்போம். இதுபோன்ற விளையாட்டுகள், செயலிகளை பயன்படுத்துபவர்களை பிரபலப்படுத்துவது அதனை ஊக்குவிக்கும் வகையில் அமையும்.

எம்பி வசந்தகுமார் பப்ஜி விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் என்கிற செய்தியை பகிர்பவர்கள் நாமும் விளையாடாமல் போய்விட்டோமே என்றே பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், பப்ஜி விளையாட்டிற்கு சான்றிதழ் வழங்கியது தவறு என எம்.பி வசந்தகுமார் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க