YouTurn

அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறுவதாக பிடிஆர் ட்வீட் என பாஜகவினர் பரப்பும் பொய்

அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறுவதாக பிடிஆர் ட்வீட் என பாஜகவினர் பரப்பும் பொய்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அண்ணாமலை அடித்த அடியில் அரசியலை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்த பிடிஆர். ‘எனது தொழிலைவிட்டு வெளியேறி அரசியல் வாழ்க்கைக்கு வந்து 18 மாதங்கள் பிறகு இன்று தான் முதல் முறையாகத் தவறான தேர்வை நான் செய்துள்ளேன் எனக் கருதுகிறேன் என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட் செய்துள்ளார்.

விரிவான விளக்கம்

மதுரையில் ராணுவ வீரரின் இறப்பு நிகழ்வில் பிடிஆரின் காரின் மீது பாஜகவினர் செருப்பு எறிந்த விவகாரம் பல சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றது. இதன்பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் அரசியல் விவகாரத்தில் வார்த்தை மோதல்கள் உருவாகி உள்ளது.





Archive link  

இந்நிலையில், அண்ணாமலைக்குப் பயந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் அரசியல் வாழ்விற்கு வந்தது தவறான முடிவு எனத் தெரிவித்ததாக ட்விட் ஒன்றை தற்போது பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர்.

உண்மை என்ன ?

பிடிஆர் பதிவிட்டதாக பரவும் ட்விட்டில் 2022 செப் 1ம் தேதி என இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தேடியபோது சமீபத்தில் பிடிஆர் அப்படி ஒரு ட்விட் பதிவிடவில்லை. அது கடந்த 2017 ஆண்டு பதிவிட்ட பதிவு.



Twitter link | Archive link

எதற்காக அப்படி ஒரு ட்விட்டை பதிவிட்டு இருந்தார் என்றால், தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வால்அரியலூர் மாணவி அனிதா இறந்த அன்று இவ்வாறு ட்விட் செய்து இருந்தார். இந்த ட்விட்டை தொடர்ந்து நீட் தேர்வும், அதனுடன் தொடர்புடைய தகுதி தேர்வுகள் அனைத்து விதமான தேர்வுகளும் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதாக இல்லை எனத் தெரிவித்து இருந்தார்.

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் தனது டிவிட்டரில் நீட் தேர்வைக் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த பிடிஆர் தான் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை என்றும், அதனால் அரியலூர் மாணவி அனிதா இறந்த சம்பவத்தை ஒரு பெற்றோராக என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், அனிதாவின் பெற்றோரின் வலியை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை எனக் கருத்து தெரிவித்து இருந்தார்.



2௦17ல் எழுதிய ட்விட்டுகளில் உள்ள முன் பகுதியை மட்டும் எடுத்து அதை தற்போது பதிவிட்ட ட்விட் போன்று வருடத்தை மாற்றி அண்ணாமலைக்காக பதிவிட்டதாக தவறாக வைரலாக்கி வருகின்றனர்.

முடிவு :

நம் தேடலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குப் பயந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியல் வாழ்க்கையை விட்டு செல்வதாக கூறப்படும் செய்தி தவறானது. பிடிஆர் சமீபத்தில் அதுபோன்று ட்விட் ஏதும் செய்யவில்லை.

கடந்த 2017 ஆண்டில் அரியலூர் மாணவி அனிதா இறப்பை ஒட்டி பிடிஆர் பதிவிட்ட ட்வீட் பதிவில் வருடத்தை மாற்றி அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு செல்வதாக பதிவிட்டு உள்ளார் என பாஜகவினர் வதந்தியைப் பரப்பி வருகின்றனர் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க