YouTurn

ஆர்.எஸ்.எஸ் பாணியில் சல்யூட் செய்யும் பிரணாப் முகர்ஜி: மார்ஃபிங் புகைப்படம் .

ஆர்.எஸ்.எஸ் பாணியில் சல்யூட் செய்யும் பிரணாப் முகர்ஜி: மார்ஃபிங் புகைப்படம் .

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜூன் 7-ம் தேதி நாக்பூரில் உள்ள Hedgewar Residence-ல் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அருகில் இருக்கும்...

பரவிய செய்தி

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் பாணியில் வணங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.

விரிவான விளக்கம்

ஜூன் 7-ம் தேதி நாக்பூரில் உள்ள Hedgewar Residence-ல் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அருகில் இருக்கும் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் பாணியில் நெஞ்சில் கை வைத்து வணங்குவது போன்றும், அவரின் தலையில் மோகன் பகவத் அணிந்தது போன்ற கருப்பு நிற தொப்பியை அணிந்தது போன்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி உள்ளனர். இவ்வாறு, ஒரு காங்கிரஸ் தலைவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சல்யூட் செய்துள்ளார் என்று போட்டோஷாப் மூலம் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஸ்தா முகர்ஜி, பிரணாப் முகர்ஜி எந்தவொரு கருப்பு தொப்பியையும் அணியவில்லை, சல்யூட் செய்யவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் மகள் மற்றும் காங்கிரஸ் தலைவரான ஷர்மிஸ்தா முகர்ஜி இந்த புகைப்படங்கள் குறித்து தனது ட்விட்டரில் கூறியதாவது, “ பாருங்கள், எதை நினைத்து பயந்தேனோ என் தந்தையை எச்சரிக்கை செய்தேனோ அதே நடந்துள்ளது. சில மணி நேரங்களிலேயே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி உடைய கேவலமான சூழ்ச்சியின் ஆழத்தை இந்த வேளையில் முழு வீச்சில் இருப்பதை காணலாம் ” என்று ஜூன் 7-ம் தேதி பதிவு செய்து இருந்தார்.

இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முந்தைய நாளே ஷர்மிஸ்தா முகர்ஜி தனது ட்விட்டரில், தனது தந்தைக்கு எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல், "அவரின் பேச்சு மறுக்கப்படும். ஆனால், அவரது காட்சி தவறான தகவலுடன் சுற்றி வரும்" என்று பதிவிட்டு இருந்தார். அவரின் பதிவு போன்றே நடந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணப் முகர்ஜி பேசியதாவது,  " மதம், பிராந்தியம், வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் தேசியத்தை வரையறுக்கும் எந்தவொரு முயற்சியும் நமது தேசிய அடையாளத்தை விளக்குகிறது.

இந்தியாவின் ஆன்மா பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையில் வாழ்கிறது. மதச்சார்பின்மை மற்றும் உட்பிரிவு நமக்கு நம்பிக்கைக்குரிய விஷயம். இந்தியாவின் தேசியத்துவத்திற்கு ஒரு மொழி ஒரு மதம் எதிரி அல்ல. 122-க்கும் மேற்பட்ட மொழிகளிலும், 1600 வட்டாரங்களிலும் அன்றாட வாழ்க்கையைப் பயன்படுத்தும் 1.3 பில்லியன் மக்கள் மட்டுமின்றி உலகளாவியதாகும். 7 பிரதான மதங்கள் நடைமுறையில் உள்ளன. ஒரே ஒரு அமைப்பு, ஒரு கொடி மற்றும் பாரதத்திற்கு ஒரு அடையாளம், எதிரிகள் என ஏதும் இல்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இறுதியில், பிரணாப் முகர்ஜியின் வார்த்தைகள் மறைக்கப்பட்டு, அவரின் படத்தை மட்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போன்று தவறாக மார்ஃபிங் செய்து வெளியிட்டது சிலரின் தரக்குறைவான எண்ணத்தை பிரதிப்பலிக்கின்றது.

சுருக்கமாக

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை தவறாக மார்ஃபிங் செய்து வெளியிட்ட புகைப்படத்திற்கு பிரணாப் முகர்ஜியின் மகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க