YouTurn

தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி & ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் !

தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி & ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் தபால்துறை அலுவலங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சலக அலுவலர் உள்ளிட்ட 4 முக்கிய பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட 15 மாநில மொழிகளில் நடைபெற்று வந்தன. அஞ்சலகத்துறையில் நடைபெறும் எழுத்துத்தேர்வில் விருப்ப மொழியை தேர்வு...

பரவிய செய்தி

தபால்துறையில் முதன்மைப் பணியிடங்களுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். மாநில மொழிகளில் நடைபெறாது - தொலைத்தொடர்புத் துறை அறிவிப்பு

விரிவான விளக்கம்

இந்தியாவில் தபால்துறை அலுவலங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சலக அலுவலர் உள்ளிட்ட 4 முக்கிய பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட 15 மாநில மொழிகளில் நடைபெற்று வந்தன.

அஞ்சலகத்துறையில் நடைபெறும் எழுத்துத்தேர்வில் விருப்ப மொழியை தேர்வு செய்யும் முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 14-ம் தேதி நடைபெற்ற உள்ள தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.



மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தபால்துறை சார்பாக நடைபெறும் தேர்வில் மூன்று தாள்கள் இடம்பெறும். அதில், தாள் 1 மற்றும் இரண்டு தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் பணிக்கான தகுதியினை பெறுவார்கள். தாள் 3-ஐ தவிர மற்ற இரண்டு தாள்களும் பல விடைக் கொண்ட கேள்விகள் அடிப்படையில் நடைபெறும்.

" இவற்றில் உள்ள கேள்விகள் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகளில் இருக்கும் " என மே 16-ம் தேதி வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். ஆனால், நடக்க உள்ள தேர்வுகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்படும் என மாற்றியமைத்து உள்ளனர்.



2016-17-ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற தபால்துறை தேர்வில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வழக்கிலும் இவ்விவகாரம் தொடர்பாக கேள்விகள் எழுந்தது.

தமிழக கிராமப்புறங்களில் இருக்கும் தபால்துறையில் எந்த பணியாக இருந்தாலும் தமிழ் மொழி அறிந்தவர்கள் மட்டுமே திறம்பட செயல்பட முடியும். ஆங்கிலமோ, இந்தியோ உதவாது. இது தென்னந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.

தற்பொழுது 1,000 பணியிடங்களான தேர்வில் மாநில மொழிகளுக்கு இடமில்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடைபெறும் என மத்திய அரசு கூறி இருப்பது அநீதியாகும். நேரடியாகவே, பிற மாநிலங்களில் உள்ளவர்கள் இங்குள்ள பணியிடங்களை ஆக்கிரமித்து கொள்ள வழிவகை செய்யும் விதத்தில் இந்த அறிவிப்புகள் அமைந்து உள்ளன என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுகின்றன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…