YouTurn

தமிழ் திரைப்பட பாடலுக்கு நடனமாடிய காவலர்கள்.. உண்மை என்ன?

தமிழ் திரைப்பட பாடலுக்கு நடனமாடிய காவலர்கள்.. உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

காவலர்கள் நடனமாடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் வீடியோவில் காவலர்கள் பலர் சூழ்ந்திருக்க, நடுவே இரு காவலர்கள் தமிழ்திரைப்பட பாடல் ஒன்றிற்கு நடனமாடுவதையும் பார்க்க முடிகிறது.

பரவிய செய்தி

காவல்துறை..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

காவலர்கள் நடனமாடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும்  வீடியோவில் காவலர்கள் பலர் சூழ்ந்திருக்க, நடுவே இரு காவலர்கள் தமிழ்திரைப்பட பாடல் ஒன்றிற்கு நடனமாடுவதையும் பார்க்க முடிகிறது. 


Facebook Link: 

உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


பல சமூக ஊடகப் பக்கங்களிலும் இதே வீடியோ மலையாளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் காவலர்களும் மாலையாள பாடல் ஒன்றிற்கு நடமாடுவதையே காண முடிந்தது. 



எனவே இது குறித்து மேலும் தேடினோம். “Kerala Vision News 24x7” இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ பதிவு செய்யப்பட்டு, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பூச்சக்கல் காவல்நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


https://www.instagram.com/p/DHTOtgyiXhH/


இதன் மூலம் வீடியோவில் இருப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர்கள் அல்ல என்பதையும், இந்த வீடியோவை தமிழ் திரைப்படப்பாடலுடன் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், தமிழ்நாட்டு காவலர்களின் நடனம் எனப் பரவும் வீடியோ, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பூச்சக்கல் காவல்நிலையில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.