YouTurn

பிரதமர் மோடி ஒரே நாளில் 4 தலைவர்களை சந்திக்க வெவ்வேறு உடை அணிந்தாரா ?

பிரதமர் மோடி ஒரே நாளில் 4 தலைவர்களை சந்திக்க வெவ்வேறு உடை அணிந்தாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


நேற்று ஒரே நாளில் பாஜக தலைவர்கள் நான்கு பேரை சந்தித்தார் மோடி. வெவ்வேறு உடை உடுத்தி.!





Facebook link

விரிவான விளக்கம்

ஒரே நாளில் பாஜக தலைவர்கள் நான்கு பேரை சந்தித்த பிரதமர் மோடி வெவ்வேறு உடையை அணிந்து இருந்ததாக கூறி பிரதமர் நரேந்திர மோடி 4 தலைவர்கள் உடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





இப்புகைப்படங்களின் தொகுப்புகள் ஜூன் 12-ம் தேதி முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து பார்க்க தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் முதல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஜூன் 11-ம் தேதி பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவாகி இருக்கிறது. யோகி ஆதித்யநாத் உடைய ட்விட்டர் பக்கத்திலும் இப்புகைப்படம் இடம்பெற்று உள்ளது.



Twitter link | Archive link

பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் மற்ற புகைப்படங்கள் குறித்து தேடுகையில், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் நஜ்மா ஹேப்துல்லாவை பிரதமர் சந்தித்ததாக மூன்றாவதாக உள்ள புகைப்படம் ஜூன் 10-ம் தேதி பதிவாகி இருக்கிறது.



Twitter link | Archive link

உத்தரகாண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் அவர்களை பிரதமர் மோடி சந்தித்ததாக நான்காவதாக உள்ள புகைப்படம் ஜூன் 7-ம் தேதி ட்விட்டரில் பதிவாகி இருக்கிறது.



Twitter link | Archive link  

அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பீஸ்வா அவர்களை பிரதமர் மோடி சந்தித்ததாக ஜூன் 2-ம் தேதி பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் இரண்டாவதாக உள்ள புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.



Twitter link | Archive link  

முடிவு :

நம் தேடலில், பிரதமர் மோடி ஒரே நாளில் 4 பாஜக தலைவர்களை சந்திக்க வெவ்வேறு உடையில் வந்ததாக பரப்பப்படும் புகைப்படங்கள் தவறானது. 3 மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர் ஒருவரை வெவ்வேறு நாட்களில் பிரதமர் மோடி சந்தித்த புகைப்படங்களை ஒரே நாளில் எடுத்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க