யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மரங்களின் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் பொள்ளாச்சி வனப் பகுதியைச் சேர்ந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் குறிப்பிட்டு, மரங்கள் மாநாடு நடைபெற்ற இடத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிக்கப்பட்டதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அருங்குளம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆகஸ்ட் 30ஆம் தேதி மரங்களின் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் மாநாடு நடந்த இடத்தில் தண்ணீர் பாட்டில்கள் போடப்பட்டுள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
நாய் ஓலா கட்சி 😂 pic.twitter.com/dEaAFcV4L1
உண்மை என்ன?
முதலில் மரங்கள் நடைபெற்றது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது கலாட்டா ஊடகத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று “நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்களுக்ககான மாநாடு தொடங்கியது..!” என்ற தலைப்பில் வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் இருக்கும் புகைப்படமும், பரவி புகைப்படமும் வேறு வேறு என்பதை உறுதி செய்யமுடிந்தது.
இதையடுத்து பரவி வரும் புகைப்படத்தை ஆய்வு செய்து பார்த்தோம். அப்போது அதில் இருக்கும் புகைப்படத்தில் பொள்ளாச்சி வனப் பகுதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மாநாடு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்றது. இந்நிலையில் பொள்ளாச்சி வனப் பகுதியைச் சேர்ந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் குறிப்பிட்டு, மரங்கள் மாநாடு நடந்தயிடம் என்று பரப்பி வருவது தெரியவந்தது.

முடிவு:
நம் தேடலில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மரங்களின் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் பொள்ளாச்சி வனப் பகுதியைச் சேர்ந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் குறிப்பிட்டு, மரங்கள் மாநாடு நடைபெற்ற இடத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிக்கப்பட்டதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது.
