YouTurn

பெட்ரோல் விலையை இந்தியா 5% மட்டுமே உயர்த்தியது என பெட்ரோலியத்துறை அமைச்சர் சொன்ன தவறான தகவல் !

பெட்ரோல் விலையை இந்தியா 5% மட்டுமே உயர்த்தியது என பெட்ரோலியத்துறை அமைச்சர் சொன்ன தவறான தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்கா பெட்ரோல் விலையை 51% அதிகரித்துள்ளது. கனடா 52%, ஜெர்மனி 55%, இங்கிலாந்து 55%, பிரான்ஸ் 50% பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஆனால், இந்தியாவில் 5% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது -  ஹர்தீப் சிங் பூரி, இந்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் !

விரிவான விளக்கம்

இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல்  டீசல் விலை உயர்வு காரணமாக ஆளும் பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில், " ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்கா பெட்ரோல் விலையை 51% அதிகரித்துள்ளது. கனடா 52%, ஜெர்மனி 55%, இங்கிலாந்து 55%, பிரான்ஸ் 50%, ஸ்பெயின் 58%, இலங்கை 55% பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஆனால், இந்தியாவில் 5% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது " எனப் பேசியுள்ளார்.



உண்மை என்ன ? 

இந்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் petroleum planning & analysis cell இணையதளம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்டவையின் விலை தரவுகளை கொண்டுள்ளது.

































வருடம்

/நகரங்கள்
2021 ஏப்ரல்

விலை (ரூ)
2022 ஏப்ரல்

1ம் தேதி

விலை(ரூ)
அதிகரித்த

சதவீதம்
டெல்லி90.56101.8112.42%
மும்பை96.98116.7220.35%
சென்னை92.58107.4516.06%
கொல்கத்தா90.77111.3522.67%

அட்டவணைப்படி, ஏப்ரல் 2021 முதல் 2022 ஏப்ரல் 1-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சில்லறை விற்பனையில் பெட்ரோல் விலையானது, டெல்லியில் 12.42% , மும்பையில் 20.35% , சென்னையில் 16.06% , கொல்கத்தாவில் 22.67% வரை உயர்ந்து இருக்கிறது. அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதை விட விற்பனை விலை அதிகமாகவே உயர்ந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டேதான் செல்கிறது.

மற்ற நாடுகளை ஒப்பிட்டு அமைச்சர் கூறியதில் முதலாவதாக இடம்பெற்ற அமெரிக்கா பற்றித் தேடுகையில், " அமெரிக்காவின் Energy Information Administrationன் படி ஒரு கேலனிற்கு 3.7 லிட்டர் உள்ளன. 2021 ஏப்ரல் மாதம் 2.9 டாலர் ஆக இருந்த பெட்ரோல் விலை (ஒரு கேலன்) 2022 ஏப்ரல் 4-ம் தேதி 4.5 டாலர் ஆக உயர்ந்துள்ளது. ஒரு கேலன் பெட்ரோலுக்கே விலையானது 55% உயர்ந்துள்ளது. ஆனால், 2022 ஏப்ரல் 4-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 1.21 டாலர், அதன்படி பார்கையில் இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91 ரூபாய். இது இந்தியாவை விட குறைவே.

கனடா நாட்டைப் பொறுத்தவரையில் www2.nrcan.gc.ca இணையதளத்தின் படி, 2021 ஏப்ரல் 6-ம் தேதி அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 128 கனடா சென்ட் ஆக இருந்த விலை 2022 ஏப்ரல் 5-ம் தேதி ஒரு லிட்டர் 175 கனடா சென்ட் ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்கையில், 36.71 சதவீதம் விலை உயர்ந்து இருக்கிறது, 52% அல்ல.

இங்கிலாந்து நாட்டில் 2021 ஏப்ரல் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 125 பென்ஸ் ஆக இருந்தது 2022 ஏப்ரல் மாதம் 162 பென்ஸ் ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் விற்பனை விலை 29.60 சதவீதம் உயர்ந்துள்ளது, 55% அல்ல.

இலங்கையில் 2021 ஏப்ரல் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் 161 இலங்கையில் ரூபாயில் இருந்து 2022 ஏப்ரல் 4-ம் தேதி 283  இலங்கை ரூபாயாக (95 octane) விலை உயர்ந்துள்ளது. ஓராண்டில் இலங்கையில் பெட்ரோல் விலை 75% மேல் உயர்ந்துள்ளது. ஆனால், இலங்கையில் பொருளாதார நெருக்கடி பாதிப்புகள் பெரிய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பாக இருந்த பெட்ரோல் விலை குறித்த தரவுகள் கிடைக்கப்பெறவில்லை.
முடிவு :



நம் தேடலில், ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்கா 51% , கனடா 52%, இங்கிலாந்து 55%, இலங்கை 55% வரை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஆனால், இந்தியாவில் 5% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என இந்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறிய சதவீதங்கள் தவறானது.


இந்தியாவில் கடந்த ஓராண்டில் குறைந்தபட்சம் 12% முதல் 22 சதவீதம் வரை பெட்ரோல் விலை உயர்ந்து இருக்கிறது என அறிய முடிகிறது.


ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க