YouTurn

பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் எனப் பரவும் பழைய புகைப்படம் !

பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் எனப் பரவும் பழைய புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இது பால் தினகரன் வீட்டில் கைப்பற்றிய பணம்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்


கோவை காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், " இயேசு அழைக்கிறார் " என்ற அமைப்பின் தலைவராகவும் இருக்கும் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 3 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாமல் பல்வேறு நிறுவனங்களில் ரூ.118 கோடி முதலீடு செய்தது தெரிய வந்தது.


மேலும், காருண்யா பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த 4.7 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.


பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையால் நடத்தப்பட்ட சோதனையும், அங்கு கிடைத்த கணக்கில் காட்டாத 118 கோடி முதலீடு மற்றும் 4.7 தங்கம் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


உண்மை என்ன ?


கட்டுக்கட்டாக பணத்தை அடிக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " திருவாரூரில் அரிசி ஆலையில் லஞ்சம் பெற்றபோது பிடிபட்ட நாகை மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையின்போது ரூ.62 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது " என 2020 டிசம்பர் 11-ம் தேதி விகடனில் வெளியான செய்தி கிடைத்தது.



" இயேசு அழைக்கிறார் " என்ற கிறிஸ்தவ அமைப்புக்கு வெளிநாட்டில் இருந்து பண உதவிகள் மற்றும் வரி ஏய்ப்பு செய்வதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது. பால் தினகரனின் மத பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரும் வருமானத்தை கணக்கில் காட்டாமல் இந்தியா மற்றும் வெளிநாட்டில் வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதிகளை வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தியில் வெளியாகி இருக்கிறது.


நாகை மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தனராஜ் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த லஞ்ச பணத்தை பிடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பால் தினகரன் வீட்டில் கைப்பற்றியதாக தவறாக பகிர்ந்து வருகிறார்கள்.



ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க