YouTurn

காசா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய எல்லை சுவரைத் தாண்ட முயல்வதாகப் பரவும் பழைய லெபனான் வீடியோ !

காசா முஸ்லீம்கள் எகிப்துக்குள் நுழைய எல்லை சுவரைத் தாண்ட முயல்வதாகப் பரவும் பழைய லெபனான் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

100% முஸ்லீம் நாடான எகிப்து, காஸாவிலிருந்து முஸ்லிம்கள் தனது எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க 36 அடி உயர வேலியை அமைத்தது. இப்போது காஸா முஸ்லிம்கள் உயரமான வேலியைக் கடந்து எகிப்துக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.இது முஸ்லிம் உலகின் மிகப் பெரிய போலித்தனம் .

X link | Archive link

விரிவான விளக்கம்

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அங்குள்ள மக்கள் எகிப்து நாட்டுக்குள் நுழைய முயற்சி செய்து வருவதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

அப்பதிவுகளில் ‘100 சதவீதம் முஸ்லீம் நாடான எகிப்து காசாவில் உள்ள முஸ்லீம்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட 36 அடி உயரச் சுவரினை, காசா மக்கள் கடக்க முயல்கின்றனர்’ என்றுள்ளது.



Archive link  



உண்மை என்ன ?

எகிப்து எல்லையைக் காசா மக்கள் தாண்டுவதாகப் பரவும் படம் குறித்துத் தேடியதில், அது 2021ம் ஆண்டு மே மாதம் இஸ்ரேல் - காசா மீது நடத்திய தாக்குதலுக்கு எதிராக லெபனான் நாட்டினர் நடத்திய போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. 


X post link 


2021, மே 16ம் தேதி ‘பாலஸ்தீன எல்லையில் லெபனான்’ எனக் குறிப்பிட்டு hargeisawi என்ற டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் பரவக் கூடிய புகைப்படத்தில் இருப்பது போல் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த ஒருவர் சுவரின் மீது ஏறுவதும், பாலஸ்தீன கொடி இருப்பதும் காண முடிகிறது. 



அதே போல் 2021, மே 17ம் தேதி CNN Arabic யூடியூப் பக்கத்திலும் அதனுடன் தொடர்புடைய வீடியோ ஒன்று கிடைத்தது. அதன் நிலைத்தகவலில் (Description) ‘காசாவுக்கு ஏற்பட்ட நிலைக்கு வருத்தமடைந்த லெபனான் ஆர்ப்பாட்டக்காரர்கள் 25 அடிக்கும் உயரமான கான்கிரீட் சுவர் மீது ஏறி பாலஸ்தீனிய கொடிகளை வைத்தனர்’ என்றுள்ளது. 



2021ம் ஆண்டு மே மாதம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு லெபனான் நாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது இஸ்ரேல் - லெபனான் எல்லைப் பகுதி சுவர் மீது ஏறியுள்ளனர். அது தொடர்பாக ‘Arab News’ என்னும் தளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘Reuters’ தளத்திலும் உள்ளன.



அப்போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படத்தினைத்தான் தற்போதைய இஸ்ரேல் - ஹமாஸ் போருடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க : காசா மக்களுக்குத் தண்ணீர், உணவு கொண்டு செல்லும் எகிப்தியர்கள் எனப் பழைய வீடியோவை பதிவிட்ட மாலை மலர் !

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பிற்கு இடையேயான போருடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : பாலஸ்தீனர்கள் போரில் காயம் அடைந்தது போல நாடகம் ஆடுவதாகத் தவறாகப் பரவும் பழைய விழிப்புணர்வு வீடியோ !

முடிவு :

நம் தேடலில், காசா பகுதி மக்கள் எகிப்து நாட்டிற்குள் நுழைய எல்லை சுவரினை தாண்டுவதாகப் பரவும் படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல. 2021, மே மாதம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் மக்கள் போராடியபோது லெபனான் - இஸ்ரேல் எல்லையில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க