யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் இது. இதை திமுக ஆட்சியில் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் மத அடையாளம் உள்ளது என்று குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
Polymer News தவிர, வேறு எந்த சானலிலும் இது வராது. எப்படி? ஹஹ்ஹஹா.. வராமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.
விரிவான விளக்கம்
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் ஆங்கிலப்பள்ளியில் கிறித்துவ மதத்தின் அடையாளங்களை பதிய வைக்கும் முயற்சியாக எ ஃபார் ஆதாம், பி ஃபார் பைபிள் என்று அச்சிடப்பட்ட புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் அவ்வாறு அச்சிடப்பட்ட புத்தகம் காட்டப்படுவதையும் தெளிவாகக் காண முடிகிறது.
கிறிஸ்தவ மத மாற்றத்தின் உச்சம் பள்ளிப் பாட புத்தகத்தில் A" for ஆதாம்". B" for பைபிள். C" for கிறிஸ்து. J" for ஜீஸஸ்" என்று குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சை வளர்த்த பள்ளி நிர்வாகம் திராவிட ஆட்சியில் உச்சகட்டம்...... pic.twitter.com/tSSK15DFtM
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“நியூஸ்18 தமிழ்” ஊடகப் பக்கத்தில், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ குறித்து கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்றே செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அந்த செய்தியில், “கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைபள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் ஏ ஃபார் ஆதாம், பி ஃபார் பைபிள், சி ஃபார் கிறிஸ்து, என்றும் ஐ ஃபார் இம்மானுவேல், ஜெ ஃபார் ஜீசஸ் என்று அந்த பட்டியல் நீள்கிறது. இதனை தினமும் மாணவர்கள் மனதில் பதியவைக்கும் வகையில் எழுத்து பயிற்சியும் கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, முதன்மை கல்வி அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் இது என்பது தெளிவாகிறது. இதை திமுக ஆட்சியில் வடலூரில் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் மத அடையாளம் உள்ளது என்று குறிப்பிட்டு சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், “திமுக ஆட்சியில் வடலூரில் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் மத அடையாளம்” எனப் பரவும் வீடியோ கடந்த 2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.