யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2022 நவம்பரில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரி மாணவ, மாணவிகள் 108 பேர், கந்த சஷ்டி கவசம் பாடும் நிலழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.
பரவிய செய்தி
நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து பாடிய கந்த சஷ்டி கவசம்.. தமிழகத்தின் அடுத்த இந்து சனாதனிகள் மனம் உருகி அருமையாக பாடிய கந்த சஷ்டி கவசம்.
விரிவான விளக்கம்
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் நாளை (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் முருகன் மாநாட்டை முன்னிட்டு நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர் எனக் கூறி வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் அவ்வீடியோவை, “தமிழகத்தின் அடுத்த இந்து சனாதனிகள் மனம் உருகி அருமையாக பாடிய கந்த சஷ்டி கவசம்” என்று கூறி பரப்பி வருவதையும் காண முடிகிறது.
தமிழகத்தின்
#MuruganMaanadu#Kanthasastikavasam pic.twitter.com/Gtpd11iybO
ஆன்மீக பெருமக்கள்
மனம் உருகி
அருமையாக பாடிய
கந்த சஷ்டி கவசம்.
நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து பாடிய கந்த சஷ்டி கவசம், தமிழகத்தின் அடுத்த இந்து சனாதனிகள் மனம் உருகி அருமையாக பாடிய கந்த சஷ்டி கவசம்.
#MuruganMaanadu pic.twitter.com/9XC75rQEWO
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“AALAYA TV” யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ கடந்த 2022-ல் “100 கல்லூரி மாணவிகள் ஒன்றாக பாடிய கந்த சஷ்டி கவசம்” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இருப்பதையும் தெளிவாகக் காண முடிந்தது.
எனவே பரவி வரும் வீடியோ குறித்து மேலும் தேடியதில், கடந்த 2022 நவம்பரில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரி மாணவ, மாணவிகள் 108 பேர் வடபழனியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி இது என்பதையும், இந்த கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தான் தொடங்கி வைத்துள்ளார் என்பதையும் அறிய முடிந்தது இதனை “Thanthi TV” வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிந்தது.
அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, மதுரையில் நடைபெறவுள்ள முருகன் மாநாட்டை முன்னிட்டு நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர் எனக் கூறி பலரும் தவறாக பரப்பி வருகின்றனர்.
மேலும் இதே போன்று, கடந்த ஆண்டும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கந்த சஷ்டி பாராயணம் நடத்தப்பட்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
நம் தேடலில், மதுரையில் நடைபெறவுள்ள முருகன் மாநாட்டை முன்னிட்டு நூறு கல்லூரி மாணவிகள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர் எனக் கூறி பரவும் வீடியோ, கடந்த 2022-ல் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்வில் எடுக்கப்பட்ட பழைய வீடியோஎன்பது உறுதியாகிறது.