YouTurn

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் எனப் பரவும் பழைய வீடியோ!

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் என்று கூறி பரவும் இந்த வீடியோ கடந்த 2019-ல் எடுக்கப்பட்டது. இந்த பழைய வீடியோவை தற்போது எடுக்கப்பட்டதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

கடவுளே.. அஜித்தே..!! சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் பார்த்ததற்கு பின்பு!


X Link | Archive Link

விரிவான விளக்கம்

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை பார்த்துவிட்டு ரயிலில் நின்றபடியே கடவுளே அஜித்தே என்று கோஷமிடுவது போல வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 


#GoodBadUgly #Ajithkumar #GoodBadUglyBlockbuster

pic.twitter.com/BkxozXZru8

— Thileep 🇫🇷 (@Thileep_Off) April 16, 2025


#GoodBadUgly #Ajithkumar #GoodBadUglyBlockbuster

pic.twitter.com/UQdPEHaUPi

— Thala Freakin Mani 94 (@ThalaFreakMani) April 16, 2025


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


Yokii” யூடியூப் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ, “பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் ரயில் பாதையில் சேட்டைகள்” என்று குறிப்பிட்டு 21 ஜூன் 2019 அன்றே பதிவு செய்யப்பட்டிருந்தது.



இதன் மூலம் பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகிறது. கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் தான், கடவுளே அஜித்தே என்று கத்துவது போன்ற ஆடியோவை மட்டும் சேர்த்து எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் பார்த்ததற்கு பின்பு சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்களின் செயல் என்று கூறி பரவும் வீடியோ, கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.