யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சுற்றுலாத்தளமாக மாறிய திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா என்று பரவும் பழைய புகைப்படம்!
பரவிய செய்தி
சிக்கந்தர் தர்காவுக்கு மார்க்கெட்டிங் செய்து இலவச விளம்பரம் கொடுத்த சங்கிகளுக்கு நன்றி
விரிவான விளக்கம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகில் இருக்கும் கல்தூணில் தீபம் ஏற்றம் வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ‘தீபத் தூணில்’ கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் போலீஸார் மலையில் ஏற அவர்களை அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் இதானல் சிக்கந்தர் தர்கா தற்போது சுற்றுலாதளமாக பிரபலமாகி விட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிக்கந்தர் தர்காவுக்கு மார்க்கெட்டிங் செய்து இலவச விளம்பரம் கொடுத்த சங்கிகளுக்கு நன்றி🙏🏼 pic.twitter.com/656jBZoMGe
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படம் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது wordpress வலைதளத்தில் “சிக்கந்தர் பாதுஷா சந்தனக்கூடு” என்ற தலைப்பில் மார்ச் 04, 2021 அன்று வெளியான கட்டுரையை பார்க்கமுடிந்தது. அதில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா பகுதியில் நடைபெற்ற ‘பசுமை நடை’ நிகழ்வு குறித்து குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படம் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, “பசுமைநடை [31 வது நடை] திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள சிக்கந்தர் தர்ஹா பயணம்” என்ற தலைப்பில் பிப்ரவரி 21, 2014 அன்று வெளியான மற்றொரு கட்டுரையை பார்க்கமுடிந்தது. அதிலும் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா பகுதியில் நடைபெற்ற ‘பசுமை நடை’ நிகழ்வு குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. பரவி வரும் புகைப்படத்திற்கு தொடர்புடைய பல புகைப்படங்கள் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
முடிவு:
எனவே, பரவி வருவது கடந்த 2014ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா பகுதியில் நடைபெற்ற ‘பசுமை நடை’ நிகழ்வுடன் தொடர்புடைய பழைய புகைப்படமாகும். இதை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல தவறாகப் பரப்பி வருகின்றனர்.