YouTurn

தற்போது நடந்ததாக பரப்பப்படும் ஆணவப் படுகொலை பற்றிய பழைய செய்தி!

தற்போது நடந்ததாக பரப்பப்படும் ஆணவப் படுகொலை பற்றிய பழைய செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான மூன்றாண்டுகள் பழைய செய்தி இது.

பரவிய செய்தி

கும்பகோணம் அருகே திருமணமாகி 5 நாட்களில் சோகம், காதல் திருமணம் செய்த தம்பதி கொலை.



Link / Archive Link


image.png


Link

விரிவான விளக்கம்

கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று திருநெல்வேலியில் கவின் செல்வகணேஷ் என்ற பட்டியல் சமூக இளைஞரை சுர்ஜித் என்ற பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து ஆணவக் கொலை குறித்து சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விவாதம் நடந்தது.


இவ்வாறு ஆணவப் படுகொலை பற்றி சமூக வலைத்தளத்தில் பலரும் பேசிவரும் நிலையில், தேவேந்திரன் பழனிசாமி என்ற ஊடகவியலாளர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், ”கும்பகோணம் அருகே திருமணமாகி 5 நாட்களில் சோகம், காதல் திருமணம் செய்த தம்பதி கொலை” என்ற தலைப்புடைய பத்திரிகை செய்தியை பரப்பிவருகிறார்.

மேலும் சிலர், இதே பத்திரிகை செய்தியை பதிவிட்டு, ‘இதில் கொலை செய்யப்பட்ட ஆண் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் பெண் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்றும்’ பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன?


பரப்பப்படும் செய்தியில் உள்ள தலைப்பை Keywords-ஸாகக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’விகடன்’ செய்தித்தளத்தில் இதுகுறித்த செய்தியைக் காணமுடிந்தது. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகியுள்ள இந்த செய்தியில், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியான சரண்யா (24),  மோகன் (31) ஆகியோரை சரண்யாவின் அண்ணன் சக்திவேல் (31) அரிவாளால் வெட்டி ஆணவக் கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம், சரண்யாவும் மோகனும் திருமணம் செய்து கொண்ட ஐந்து நாட்களில் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

image.png


இதிலிருந்து, இந்த செய்தி மூன்று ஆண்டுகள் பழையது என்பது தெளிவாகத் தெரிகிறது.


மேலும், இந்த சம்பவம் குறித்த செய்திகளைத் தேடியபோது, ’BBC தமிழ்’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில், ஆணவக் கொலை செய்யப்பட்ட சரண்யா பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவியலராக பணியாற்றி வந்ததும் தெரியவருகிறது. மேலும் மோகன் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவருகிறது.


image.png


இதிலிருந்து, கொலை செய்யப்பட்ட ஆண் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் பெண் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் பரப்பப்படும் தகவல் உண்மை தான் என்பது தெரியவருகிறது.


முடிவு:


மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஆணவக் கொலை பற்றிய செய்தி தற்போது நடந்ததாக சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…