
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அறிவார்ந்த கூட்டத்தை யாராவது பார்த்து இருக்கிறீர்களா?
X Post Link | Archive link

X Post Link | Archive link
விரிவான விளக்கம்
சென்னையில் கடந்த டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நாட்களில் கொட்டித் தீர்த்த, கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தாலும், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளின் துண்டிப்பாலும் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை சாலைகளில் புல்டோசரின் உதவி மூலம் தண்ணீர் அகற்றப்படுவதைப் பாருங்கள் என்று கூறி 29 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் அதிமுக கட்சியைச் சேர்ந்த CTR. நிர்மல் குமார் உட்பட, பாஜகவினர் பலராலும் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. பரவி வரும் வீடியோவில் புல்டோசரின் மூலம் அகற்றப்படும் தண்ணீர், மற்றொரு வண்டிக்கு மாற்றப்படுவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், இது சென்னையில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் கடந்த 2022 ஜூலை 24 அன்று Khushal Pakistan என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. இவருடைய சுயவிவரங்க்களை ஆய்வு செய்ததில் இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிந்தது.
மேலும் தேடியதில், இதற்கு முன்னரே கடந்த 2018 டிசம்பர் 06 அன்று finofilipino என்ற ஸ்பானிஷ் மொழியைச் சேர்ந்த பொழுதுபோக்கு வலைத்தளப்பக்கத்தில் "உங்களுக்கு மணிநேரத்திற்கேற்ப ஊதியம் வழங்கப்படும்போது" என்ற தலைப்பில் நையாண்டியாக பதிவு செய்யப்பட்டு இதே வீடியோ வெளியிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

ஆனால் 2018-ல் இருந்தே வெளிநாட்டு ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோ, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன்கள் நீந்துவதாகப் பரவும் ஜார்ஜியா வீடியோ !
மேலும் படிக்க: மிக்ஜாம் புயலில் நிலநடுக்கம் எனப் பரவும் மியான்மரில் மோச்சா புயலில் எடுத்த வீடியோ!
முடிவு:
நம் தேடலில், சென்னையில் வெள்ள நீரை புல்டோசர் மூலம் அகற்றப்படுவதாகப் பரவும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும், இது கடந்த 2018-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும் அறிய முடிகிறது.
இந்நிலையில் சென்னை சாலைகளில் புல்டோசரின் உதவி மூலம் தண்ணீர் அகற்றப்படுவதைப் பாருங்கள் என்று கூறி 29 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் அதிமுக கட்சியைச் சேர்ந்த CTR. நிர்மல் குமார் உட்பட, பாஜகவினர் பலராலும் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. பரவி வரும் வீடியோவில் புல்டோசரின் மூலம் அகற்றப்படும் தண்ணீர், மற்றொரு வண்டிக்கு மாற்றப்படுவதையும் காண முடிகிறது.
செல்லூர் ராஜீ பரவாலடா உங்களுக்கு pic.twitter.com/RuzKAC6A50
— மருது (@Marudhunt_Mp) December 8, 2023
அடடா என்ன ஒரு விஞ்ஞான அறிவு..
நெம்பர் ஓன் மாடல்... pic.twitter.com/HYbMvQd9QO
— பாரதி கண்ணம்மா,जय श्री राम (@vanamadevi) December 8, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், இது சென்னையில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் கடந்த 2022 ஜூலை 24 அன்று Khushal Pakistan என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. இவருடைய சுயவிவரங்க்களை ஆய்வு செய்ததில் இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடிந்தது.
மேலும் தேடியதில், இதற்கு முன்னரே கடந்த 2018 டிசம்பர் 06 அன்று finofilipino என்ற ஸ்பானிஷ் மொழியைச் சேர்ந்த பொழுதுபோக்கு வலைத்தளப்பக்கத்தில் "உங்களுக்கு மணிநேரத்திற்கேற்ப ஊதியம் வழங்கப்படும்போது" என்ற தலைப்பில் நையாண்டியாக பதிவு செய்யப்பட்டு இதே வீடியோ வெளியிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

ஆனால் 2018-ல் இருந்தே வெளிநாட்டு ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோ, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன்கள் நீந்துவதாகப் பரவும் ஜார்ஜியா வீடியோ !
மேலும் படிக்க: மிக்ஜாம் புயலில் நிலநடுக்கம் எனப் பரவும் மியான்மரில் மோச்சா புயலில் எடுத்த வீடியோ!
முடிவு:
நம் தேடலில், சென்னையில் வெள்ள நீரை புல்டோசர் மூலம் அகற்றப்படுவதாகப் பரவும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும், இது கடந்த 2018-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும் அறிய முடிகிறது.