YouTurn

ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளா ?

ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஒரு பெண்ணின் வயிறு பெரிதாக உள்ள படத்தையும், ஒரே நாளில் பிறந்த 11 குழந்தைகள் படத்தையும் இணைத்து ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 11 குழந்தைகள் பிறந்துள்ளன என்ற செய்தி பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. ஆனால் அந்தப் படங்களை நன்றாக கவனித்தாலே இரண்டிற்கும் தொடர்பில்லை என...

பரவிய செய்தி

ஒரு பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள் பிறந்துள்ளன. இது மிகப்பெரிய அதிசயமாகும்.

விரிவான விளக்கம்

ஒரு பெண்ணின் வயிறு பெரிதாக உள்ள படத்தையும், ஒரே நாளில் பிறந்த 11 குழந்தைகள் படத்தையும் இணைத்து ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 11 குழந்தைகள்  பிறந்துள்ளன என்ற செய்தி பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. ஆனால் அந்தப் படங்களை நன்றாக கவனித்தாலே இரண்டிற்கும் தொடர்பில்லை என அறியலாம்.


ஒரு பெண்ணும் ஆணும் சாதாரணமாக இணைந்து குழந்தை பிறக்கும் முறையில் அல்லாமல் பெண்ணின் கருமுட்டைக்குள் நேரடியாக ஆணின் விந்தணுவை ஊசியின் மூலம் செலுத்தி கரு உருவாக்கம் நடைபெறும் முறையை In Vitro Fertilization (IVF) என்பர்.


சூரத்தில் நகரில் அமைந்துள்ள 21st Century (IVF) மருத்துவமனையில் 30 பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 11 பெண்களுக்கு 2011 ஆம் ஆண்டின் முக்கிய நாளான 11.11.11 அன்று பிரசவம் நடைபெற ஏற்பாடுகள் செய்தனர். அன்றைய தினத்தில் 11 குழந்தைகள் பிறந்தன . அதை கொண்டாடும் விதத்தில் அன்று பிறந்த 11 குழந்தைகளுடன், அந்த மையத்தின் மருத்துவர்கள் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 1200க்கும்  மேற்பட்ட தம்பதிகள் IVF முறையில் பயனடைந்துள்ளனர் என்று அம்மையத்தின் மருத்துவர் Dr.பூஜா அவர்கள் கூறியுள்ளார் .


கலிபோர்னியாவை சேர்ந்த 33 வயதான நத்யா சுலேமன் என்பவர் தனது பிரசவத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. குழந்தை வளரும் காலங்களில் பெண்களின் வயிறு பெரிதாக இருப்பது இயல்பானதே. ஆனால் இந்த படத்தில் உள்ள பெண்ணிற்கு வயிறு  மிகப்பெரிதாக இருப்பது ஆச்சரியமாக இருக்கலாம்.


அதற்கான காரணம் என்னவென்றால் இப்பெண் IVF முறையில் எட்டு குழந்தைகளை வயிற்றில் சுமந்துள்ளார். இவருக்கு ஜனவரி மாதம் 2009 ஆண்டில் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. அணைத்து குழந்தைகளும் நலமாகவும், தேக ஆரோக்கியத்துடனும் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


 இவ்வாறு தொடர்பில்லாத இரு படங்களை இணைத்து சிலர் தவறான செய்திகளை வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

சுருக்கமாக

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத படங்களை வைத்து வதந்திகளை பரப்பியுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.