YouTurn

நாம் தமிழர் கட்சிக் கூட்டம் நடந்த இடத்தில் 57 பேரை நாய்கள் கடித்ததா ?

நாம் தமிழர் கட்சிக் கூட்டம் நடந்த இடத்தில் 57 பேரை நாய்கள் கடித்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 57 பேர் மருத்துவமனையில் அனுமதி



Archive link 

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் 57 பேரை நாய்க்கடித்ததாக புதிய தலைமுறை செய்தியின் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?

பரப்பப்படும் செய்தி குறித்து தேடுகையில், 2021 டிசம்பர் 26-ம் தேதி " நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 57 பேர் மருத்துவமனையில் அனுமதி " என்ற தலைப்பிலே புதிய தலைமுறை சேனல் செய்தி வெளியிட்டு இருக்கிறது.



Twitter link | Archive link  

செய்தியில், " தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் அங்கு வந்த பொதுமக்களை நேற்று சுமார் 37 பேரைக் கடித்து உள்ளது. பொதுவாக பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள் தொடர்ந்து தேங்கி இருப்பதால் தெருநாய்கள் அதிமாக திரிவதாக பட்டுக்கோட்டை மக்கள் புகார் அளித்து இருக்கின்றனர்.

இதற்கிடையில், நேற்று அரசு மருத்துவமனைக்கும், பேருந்து நிலையத்திற்கும் வந்த வயதான மக்களை தெரு நாய்களில் இருக்கின்ற வெறிநாய்கள் கடித்திருக்கின்றன. இதனால் நேற்று 37 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் 20 நபர்களை வெறிநாய்கள் கடித்து இருக்கின்றன. மொத்தம் 50-க்கும் மேற்பட்டோர் வெறிநாய்களால் கடிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் " என இடம்பெற்று இருக்கிறது.

இதுகுறித்து புதியதலைமுறையின் இணையதளப் பிரிவைத் தொடர்பு கொண்டு கேட்கையில், பட்டுக்கோட்டையில் நாய்க்கடியால் 57 பேர் பாதிக்கப்பட்டது குறித்து நாங்கள் வெளியிட்ட செய்தியில் இப்படி எடிட் செய்து இருக்கிறார்கள் " எனத் தெரிவித்து இருந்தனர்.

முடிவு : 

நம் தேடலில், நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 57 பேர் மருத்துவமனையில் அனுமதி எனப் பரவும் செய்தி எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க